சென்னை, ஏப். 14 - அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத் தில் அம்பேத்கரது அபாரமான பங்க ளிப்பைப் பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நடந்த டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேசினார். அவரது பேச்சு வருமாறு: இந்தியாவின் உயிர் மூச்சு அதன் அரசியல் அமைப்புச் சட்டம். எதைப் பாதுகாக்க நாம் இப்போது கடுமை யாகப் போராடிக் கொண்டிருக் கிறோமோ, இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்துத் தந்தவர் டாக்டர் அம்பேத்கர். அவர் முக்கிய மான தேசத் தலைவர். அரசியல் அமைப்புச் சட்டத்தை வடித்தெடுக்கும் குழுவின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அந்தக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் குறைந்து கொண்டே வந்தது, முழு மொத்தப் பொறுப்பும் ஏற்று அம்பேத்கர் தனது அரும்பணியை எப்படி நிறைவேற்றி முடித்தார் என்பது முழுமையாக உணரப்பட வேண்டியதாகும். அம்பேத்கர் ஓர் அறிவுஜீவி. அரசியல் அறிவுஜீவி. பொருளாதார அறிவுஜீவி. சமூக அறிவுஜீவி. அரசியல் நிர்ணய சபையில் நடந்த எண்ணற்ற விவாதங்கள், கருத்தோட்டங் கள் எல்லாவற்றையும் உள்வாங்கி, வெவ்வேறு நாடுகளில் நிகழ்ந்த அரசியல் போக்குகளை கவனித்து நம் நாட்டுக்கு எப்படி அமைய வேண்டுமோ அப்படி அதை வடிவமைத்தவர். ஆயி ரத்துத் தொள்ளாயிரத்து நாற்பது களின் இறுதியில் இந்தக் கடமையை அவர் சாதித்திருப்பது அபாரமான விஷயம். அண்ணல் அம்பேத்கரை அவ ரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் நினைவு கூர்வது தற்போது மிகவும் பொருத்தமானது. அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் அவர்களது முக்கியமான பங்களிப்பை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலமிது. யாரும் அழிக்க முடியாது
யாரும் அழிக்க முடியாது என்றால் நான் அழிப்பேன் என்று பொருள்
இப்போதைய ஆட்சியாளர்களு க்கு இந்த அரசியல் சாசன சட்டத்தின் மீது மரியாதை கிடையாது. இந்த தேசியக் கொடியை அவர்கள் ஒருபோதும் மதித் தது கிடையாது. ஆனால், அண்மை யில் கூட பிரதமர் பேசினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை யாரும் அழிக்க முடியாது என்று. அதன் பொருள், நான் அழிப்பேன் என்பது. இது இந்துக்களுக்கு இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்களுக்கு பொதுவானது என்று அவர் குறிப்பிட்டார். மேடையில் எல்லாவிதமான பொய்களையும் பேசிக் கொண்டே அடிப்படையில் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் வேலை களை இவர்கள் செய்கிறார்கள். வேளாண் சட்டங்கள் உள்பட பல மாற்றப்பட்டுவிட்டது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மொத்தமாக நீக்க வேண்டும் என்று கூட அல்ல, பாளம் பாளமாக முக்கியமான அம்சங்களை இவர்கள் பெயர்த்தெடுத்து விட முடியும். ஆகவே, தேசியக் கொடியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அர சியல் அமைப்புச் சட்டத்தைப் பாது காக்க வேண்டிய கடமை நமது கடமை யாகிறது. மக்களிடம் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்று சேர்க்க வேண்டியதே இந்நாளில் நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய உறுதியாகும்.