tamilnadu

img

நெல்-மீன்-கோழி... ஒரே இடத்தில் விளையுமா?

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண்புலம் தமிழகத்தில் துவங்கப்பட்ட இரண்டா வது வேளாண் கல்லூரியாகும். மிகவும் பின் தங்கிய கிராமங்களை அதிகமாக கொண்ட கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வேளாண்மை மற்றும் சார்ந்த துறை களில் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகள் வாயிலாக நமது மாநில மற்றும் தேசிய வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்து வருகிறது. விவசாயிகளின் நடைமுறை வேளாண் பிரச்சனைகளுக்கு ஆய்வுகள் வாயி லாக புதிய தீர்வுகளை வழங்குவது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேளாண் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகள், விவ சாயக் குழுக்களிடம் ஏற்படுத்துவது, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் புதிய ஆய்வுகள் வாயி லாக உருவாக்கப்பட்ட அண்ணா மலைப் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு களின் (Annamalai University Innova tion) வாயிலாக உற்பத்தி மற்றும் உற் பத்தித் திறனை பெருக்குவது, விவ சாயிகள் தங்களின் வேளாண் விளைப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை  செய்ய உதவுவது போன்ற ஆக்கப்பூர்வ மான பல பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. தற்போது மத்திய மற்றும் மாநில வேளாண் அமைப்புகளில் உள்ளது போன்று விவசாயிகளுக்கு விரிவாக்க சேவைகளை வழங்கி அவர்களின் வரு மானத்தை இரட்டிப்பு பெறச் செய்வது டன்,  குறைந்த தண்ணீரைக் கொண்டு  அதிகளவில் பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் புதியதாக விவசாயிகளுக்கான வேளாண் தொழில் நுட்ப தகவல் மையம் (Farmer’s Agri cultural Technology Information Cell) துவங்கப்பட்டு விவசாயிகளுக்கு தனது விரிவாக்க சேவைகளை வழங்கி  வருகிறது. 

விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம்

அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண்புலத்தில் துணை வேந்தர் முனைவர். இராம. கதிரேசன், அப்போதைய வேளாண் புல  முதல்வர் முனைவர் மு.சு.சுந்தர வரத ராஜன் ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்ட வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் தற்போது பல புதிய விரிவாக்க முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்கள் வாயிலாக கடலூர் மற்றும் காவிரி பாசனப் பகுதி விவ சாயிகள், கடலோர மாவட்ட விவசாயி களுக்கு தனது விரிவாக்க சேவை களை வழங்கி வருகிறது.  கடந்த பல ஆண்டுகளாக நமது மாநில விவசாயிகள் அதிகளவில் கால நிலை மாற்ற பிரச்சனைகள் (Climate  Change Issue) மற்றும் வேளாண்  சந்தைகளில் விவசாய விளைபொருட் களின் விலை ஏற்ற இறக்கப் பிரச்சனை களை அதிகப்படியாக சந்தித்து வரு கின்றனர். மறுபுறம் நாம் மாநில மற்றும் தேசிய அளவில் உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துவிட்டாலும், ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition Deficiencies) பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. இதனால் வருமானம் குறை ந்த பிரிவைச் சேர்ந்த பல கோடிப் பெண்கள், வளர் இளம் பெண்கள், குழ ந்தைகள் தொடர்ச்சியாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். இத்தகைய நடை முறை பிரச்சனைகள் மற்றும் ஊட்டச் சத்து குறைபாடு பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் காணும் விவசாயி களின் பங்களிப்புடன் கூடிய கள ஆய்வு மற்றும் புதிய விரிவாக்க முயற்சிகளை வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் கடந்த சில மாதங்களாக மேற் கொண்டு வருகிறது. 

கள முயற்சிகள்

கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்  துறையின் பங்களிப்புடன் பின்ன லூரில் செயல்பட்டு வரும் வீர நாராய ணன் வேளாண் உழவர் உற்பத்தியா ளர் நிறுவனத்துடன் இணைந்து அண்ணா மலைப் பல்கலைக் கழக வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் மற்றும்  ஊரக வளர்ச்சி மையம் (Centre for Rural Development) ஆகியவை நாட்டு  பாசுமதி (Native Basmati) என்ற நாட்டுப் புற ரகத்தில் புதிய வேளாண் மற்றும் விரிவாக்க கள ஆராய்ச்சிகளை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகு தியாக சுமார் 1.66 ஏக்கர் பரப்பளவில் கோ.நம்மாழ்வார் நினைவு நாட்டு பாசுமதி செயல் விளக்கப் பண்ணை அமைக்கப்பட்டது. பின்னர் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் துணைவேந்தர், இராம. கதி ரேசன், ஒருங்கிணைந்த பண்ணைய விவசாய முறையை (Annamalai University Integrated Farming System) நாட்டு ரகங்கள் சாகுபடியில் பயன்படுத்தும் போது நம்மால் மிகவும் குறைந்த செலவில், இயற்கை முறை யில் நமது வேளாண் உற்பத்தியை பெருக்க செய்வதுடன் தேசம் சந்தித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை எளிதாக காண முடியும்” என்றார். தற்போது நமது விவசாயிகள் சாகுபடி செய்து வரும் பல நாட்டு ரகங்களை ஆய்வு செய்து அவற்றை விஞ்ஞானரீதியாக வளர்த்து எடுக்கும் முயற்சிகளை அண்ணாமலைப் பல் கலைக் கழகம் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்து டன் (International Rice Research Institute, Philippines) இணைந்து ஈடு பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித் தார்.

புதிய பசுமைப் புரட்சி இயக்கம்

நமது நாட்டுப்புற ரகங்களில் (Native Varieties) அண்ணாமலைப் பல்கலைக் கழக ஒருங்கிணைந்த பண்ணை விவசாய முறைகளை பின் பற்றி சாகுபடி செய்யும் போது குறைந்த அளவு நீர் வளங்களை கொண்டு நெல், மீன், கோழியை இயற்கை முறையில் சாகுபடி செய்து நமது ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகளை தர முடியும் என அண்ணாமலைப் பல்கலை.யின் புதிய  பசுமைப் புரட்சி இயக்கம் கூறுகிறது.  ஒருங்கிணைந்த பண்ணைய விவ சாய முறை என்பது ஒரே நேரத்தில் மூன்று விளை பொருட்களை விளை விப்பது ஆகும். நெல் வயலில் ஒரு குறிப்பிட்ட பரப்பு இடைவெளிவிட்டு கறிக்கோழி சாகுபடி செய்வதற்கான கூண்டுகளை அமைப்பது; கோழிக் கழிவுகள் உரமாக மாறுகிறது; நெல் வயலுக்குள் நிறுத்தப்படும் தண்ணீ ரில் மீன் வளர்ப்பையும் மேற்கொள் வது; கோழிக்கழிவுகள் நெல்லுக்கு உரமா வது மட்டுமல்ல, மீனுக்கு உணவாக வும் மாறுகிறது; நெல் நாற்றுகளுக்கு இடையே மீன்கள் நீந்திச் செல்லும் போது பூச்சிகள், நெல் நாற்றுக்கு தீங்கு செய்யும் புழுக்களின் முட்டைகள் உள்ளிட்ட அனைத்தையும் உணவாகக் கொள்கிறது. ஒன்றுக்கொன்று ஊட்ட மளித்து நெல், மீன், கோழி ஆகியவை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நல்ல வளர்ச்சியைப் பெறுகின்றன. இது வருவாயையும் ஊட்டச்சத்தையும் பெருக்க விவசாயிகளுக்கு உதவு கிறது என்கிறார் துணைவேந்தர் கதிரேசன். அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார் பில் செஞ்சிலுவை சங்க தன்னார்வ தொண்டர்களுக்கு நோக்குநிலை பயிற்சியில் வேளாண் மாணவர்கள் இந்த புதிய பசுமைப்புரட்சி இயக்கத் தைத் துவக்கியுள்ளனர்.

  1. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நினைவு, ‘நாட்டு பாசுமதி’ செயல் விளக்கப் பண்ணை திறப்பு விழா
  2. ‘நாட்டு பாசுமதி’ நெல் வயலில் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் இராம. கதிரேசன், வீர நாராயணன் வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் பிள்ளை மற்றும் இயக்குநர்கள், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் ஒருங்கிணைப்பாளர்  முனைவர் தி.ராஜ்பிரவின் உள்ளிட்டோர்.

முனைவர் தி.ராஜ்பிரவின்
இணை பேராசிரியர், வேளாண் விரிவாக்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்