tamilnadu

img

கட்ராம்பட்டியில் பட்டியலின மக்களுக்கு நிரந்தர சுடுகாடு ஒதுக்கீடு

புதுக்கோட்டை,  ஜூலை 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தலையீட்டால் புதுக்கோட்டை மாவட்டம் கட்ராம்பட்டியில் பட்டிய லின மக்களுக்கான நிரந்தர  சுடுகாடு ஒதுக்கீடு செய்யப் பட்டது. புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே கீழாத் தூர் ஊராட்சிக்கு உட்பட் டது கட்ராம்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் வசிக் கும் பட்டியல் இன மக்களுக் கென சுடுகாடு இல்லை. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக சுடுகாடாகப் பயன்படுத்திய இடத்தை பல் வேறு காரணங்களால் பட்டி யல் இன மக்கள் பயன்படுத் தாமல் இருந்துள்ளனர். அந்த இடம் தற்பொழுது வரை ஆதிதிராவிடர்களுக் கான மயானம் என்றே அரசு  ஆவணங்களில் உள்ளது. ஆனால், அந்த இடத்திற்கு சடலத்தை கொண்டு செல்ல  பாதை இல்லை. தனியாருக் குச் சொந்தமான இடத்தின் வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும். இப்பகுதியில் யாரேனும் உயிரிழக்க நேரிட்டால், நிரந்தரமாக ஒரு இடத்தில் சடலத்தை அடக்கம் செய்யா மல் சிலர் சொந்த இடங்களி லும், சிலர் குளத்து ஓரங்களி லும் புதைத்து வந்தனர். கால  வளர்ச்சியில் இவர்களுக் கென தனி சுடுகாடு இல்லாத தால் சடலத்தை அடக்கம் செய்வதில் கடுமையான சிர மத்தை சந்தித்து வந்தனர்.

வேறு சமூகத்தை சேர்ந்த வர்களின் சுடுகாட்டிலும் அடக்கம் செய்ய முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  இப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் கிணற்றுக்குள் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய போது, எதிர் பாராத விதமாக நீருக்குள் மூழ்கி இறந்துவிட்டார். அந்த இளைஞரை மேற்படி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்வோம் என  அதிகாரிகளிடம் முறையிடப் பட்டது. ஆனால், அதிகாரி கள் பாதை ஒதுக்கித் தராமல்  மௌனம் காத்தனர். இதனால், தனியார்  இடத்திற்கு சொந்தமான வர்களின் எதிர்ப்பையும் மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், சடலம்  ஊர்வலமாக எடுத்துச் சென்று மேற்படி இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  பின்னர், இதற்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தர  வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், அதே  ஊரைச் சேர்ந்த சிவமணி  என்ற பெண் செவ்வாய்க் கிழமை உயிரிழந்தார். இத னால் மறுபடியும் சடலத்தை எங்கே அடக்கம் செய்வது என்ற பிரச்சனை பெரிதாக எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநி லத் தலைவர் டி.செல்லக் கண்ணு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எல்.வடிவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.மணி வண்ணன்,

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்  தலைவர் டி.சலோமி, செய லாளர் சி.ஜீவானந்தம், வாலி பர் சங்க மாவட்டச் செய லாளர் ஆ.குமாரவேல், மாதர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி, செயலாளர் பி.சுசிலா உள்ளிட்டோர் மேற்படி கட்ராம்பட்டி கிராமத்திற்கு சென்று போராட்டம் நடத்துவதற்கு தயாராகினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி  வட்டாட்சியர் பெரியநாயகி, காவல் துணைக் கண்காணிப் பாளர் பவுல்ராஜ், கீரமங்க லம் காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாட்ஷா, ஆலங் குடி காவல் ஆய்வாளர் முத்தையன் உள்ளிட்டோர் சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சவார்த்தையில், “மேற்படி ஆதிதிராவி டர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பாதை எடுப்ப தில் சிக்கல் இருப்பதாலும்,  அந்த இடத்தில் குடி யிருப்புகள் வந்துவிட்டதா லும் வேறு புறம்போக்கு இடத் தில் தேவையான இடத்தை ஒதுக்கித் தருவதாகவும், அதற்கு பாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகவும்” அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு கட்ராம்பட்டி பகுதி மக்களும் சம்மதம்  தெரிவிக்கவே, அதிகாரிகளு டன் சென்று புதிதாக சுடு காட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட னர். அந்த இடம் அனைவ ராலும் ஏற்றுக் கொள்ளப்பட் டதை அடுத்து சிவமணி அம்மையாரின் உடல் அங்கு  அடக்கம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தலையீட்டால் பட்டியலின மக்களுக்கான நிரந்தர சுடுகாடு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.