சென்னை, நவ.30- தமிழ்நாட்டில் புதிதாக 1000 பேருந்துகள் வாங்கப்படும் என்று சட்டப்பேரவை 110-வது விதி யின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந் தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 1000 பேருந்துகள் வாங்குவதற்காக ரூ.420 கோடியை அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கும் சேர்த்து இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பேருந்து கள், சேலம் 100, கோவை 120, கும்ப கோணம் 250, மதுரை 220, நெல்லைக்கு 130 பேருந்துகள் என ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு பேருந்து வாங்க ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து நிதி ஒதுக் கப்பட்டு உள்ளது.