tamilnadu

தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், மக்கள் தொகையைக் காரணம் காட்டி, அதனை 31 ஆக குறைக்கும் சூழ்ச்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்தக் கூட்டத்திற்கு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தனிப்பட்ட அரசியல்  முரண்பாடுகளைக் கடந்து, தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் வகையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமையன்று (மார்ச் 5) காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, நடிகர் விஜயின் தவெக ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்போம் என்ற அறிவித்துள்ள நிலையில், பாஜக, நாம் தமிழர், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மட்டும் கலந்து கொள்ளமாட்டோம் என்று அறிவித்துள்ளன.