மார்த்தாண்டம்,பிப்.20 கன்னியாகுமரி மாவட்டம் திருவட் டாரில் நடைபெற்ற அகில இந்திய பிஸ்ட்பால் சப் ஜூனியர் இறுதி போட்டியில் தில்லி அணி கோப்பை யை கைப்பற்றியது. சர்வதேச அள விலான போட்டிக்கு இந்த அணி தேர்வாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திரு வட்டார் அருகே எக்சல் பள்ளியில் அகில இந்திய அளவிலான பிஸ்ட் பால் போட்டிகள் கடந்த 17ஆம் தேதி துவங்கியது இந்த போட்டியை கன்னி யாகுமரி எம்பி விஜய் வசந்த் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் பஞ்சாப், சண்டிகார், தில்லி, பாண்டிச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உட்பட 16மாநிலங்களிலிருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சப் ஜூனியர் இறுதிப் போட்டியில் ஆண்கள் அணியில் பாண்டிசேரியை வீழ்த்தி தில்லி அணியும் பெண்கள் பிரிவில் தெலுங்கானாவை வீழ்த்தி தில்லி அணியும் முதலிடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சர்வதேச பிஸ்ட்பால் போட்டிக்கு தில்லி அணி தேர்வாகி யுள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு பெண்கள் பிஸ்ட் பால் அணியினர் மூன்றாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.