“சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை.. முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை..” இந்த வரிகள் ரோஜா திரைப் படத்தின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிக ளுக்கேற்ப ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள இந்திய விண் வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றிப்பார்த்து வந்துள்ளனர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் கள் இருவர். மாணவர்கள் இருவரும் மதுரை அலங்காநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஒரு மாணவர் பெயர் ஸ்ரீநாத். எட்டாம் வகுப்பு படித்து வரு கிறார். ராதாகிருஷ்ணன்-நித்யா தம்பதியினரின் மகன். ராதாகிருஷ்ணன் கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். மற்றொரு மாணவர் பெயர் கார்த்திகேயன், மணிகண் டன்-குணவதி தம்பதியினரின் மகனான இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மணிகண் டன் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கார்த்திகேய னின் சகோதரி அலங்கா நல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திகேயன், ஸ்ரீநாத் இரு வரும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.
ஸ்ரீஹரிகோட்டாவை சுற்றிப்பார்த்தது எப்படி?
இந்த மாணவர்கள் இரு வரும் குண்டு எறிதல், 100 மீ ஓட்டத்தில் பள்ளியளவில், மாவட்ட அளவில் சாதனை படைத்து வருபவர்கள். இவர்கள் சமீபத்தில் திருநெல் வேலி, தென்காசி, விருது நகர், தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களி லுள்ள 200 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 9,000 மாண வர்கள் பங்கேற்ற Little Experor-Session-8 என்ற நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வு மதுரையிலுள்ள கியூன் மீரா பள்ளியில் நடந்தது. 9,000 மாணவர்களில் மதுரை மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் கார்த்திகேயன், ஸ்ரீநாத். இந்த இரு மாணவர்களையும் அழைத்துச் சென்றது விளை யாட்டுத்துறை ஆசிரியர் காட்வின். இந்த நிகழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனை வரும் நான்கு பேருந்துகளில் ஸ்ரீஹரிகோட்டா சென்று திரும்பியுள்ளனர். இவர்களை சென்னையில் காவல்துறை அதிகாரிகள் திருநாவுக்கரசு, மயில்வாகனன், உயர்நீதி மன்ற நீதிபதிகள் நிஷார்பானு, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத் துள்ளார். அங்கு, மாணவர்களை வரவேற்றவர் யார் தெரி யுமா...? மதுரை மாவட்டம் திரு மங்கலத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன். இவர் இஸ் ரோவில் இணை இயக்கு நராகப் பணியாற்றி வருகிறார். காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை இவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவை சுற்றிப் பார்த்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு அங்கு பணியாற்றுபவர்கள் பல் வேறு தகவல்களைக் கூறி யிருக்கின்றனர்.
இந்த அனுபவம் குறித்து பேசியஸ்ரீநாத், “ ஒரு ராக் கெட்டின் உயரம், அதன் மொத்த எடை எவ்வளவு எனக் கூறினர். வானொலி, தொலைக்காட்சி, செல்போன் பேசுவதற்கு ராக்கெட் எப்படி பயன் படுகிறது எனக் கூறினர். பயணம் மகிழ்ச்சியாக இருந் தது. இதைப்பார்த்த நான் எதிர்காலத்தில் விஞ்ஞா னியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு படிக்க முடிவு செய்துள்ளேன் என்றார்”. கார்த்திகேயனுடன் பேசு கையில், “ ராக்கெட் 44 அடி உயரம், 640 டன் எடை இருக்கும் எனக் கூறினர். ரொம்ப மகிழ்ச்சியாக இருந் தது. எதிர்காலத்தில் நான் ஒரு காவல்துறை அதிகாரி யாக வருவதற்கு ஆசைப்படு கிறேன். என்னுடைய விளை யாட்டு அதற்குக் கை கொடுக்கும் என்றார்”. ஆசிரியர் காட்வினோடு பேசியபோது, “45 வயது கடந்த நிலையில் தான் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஸ்ரீஹரி கோட்டாவிற்கு மாணவர் களை அழைத்துச் சென்றது ஒரு புதிய அனுபவம். ராக்கெட் ஏவுதளத்திலிருந்து எட்டு கி.மீ,. தொலைவில் உள்ள இடத்திலிருந்து தான் ஆராய்ச்சியாளர்கள் கண்கா ணிக்கின்றனர். ராக்கெட்டை ஏவும் போது அதன் வெப் பத்தை மட்டுப்படுத்த அங்கு பொருத்தப்பட்டுள்ள குழாய் கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி யடிக்கப்படுகிறது” என்றார்.
ரயிலில் பயணிக்க ஆசை
கடைசியாக அவர் கூறிய செய்தி தான் சற்று வித்தியாச மானது. விமானப் பயணம், ஸ்ரீஹரிகோட்டா பயணம் கூட எங்கள் பள்ளி மாணவர்கள் சிலருக்கு சாத்தியமாகி யுள்ளது. ஆனால் அலங்கா நல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னி ரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் 30 முதல் 40 மாண வர்கள் வரை ரயிலில் பயணம் செய்தது கிடையாது என்ற விபரத்தை சேகரித்து வைத்துள்ளேன். எப்படியா வது இந்த மாணவர்களை ரயிலில் அழைத்துச் சென்று வரவேண்டும் என்றார். “சின்னச் சின்ன ஆசை ரயிலில் பயணம் செய்ய ஆசை....” என்ற இந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நிறைவேறுமா...? (ந.நி)