tamilnadu

img

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாடு கழுத்தில் குத்தியதில் ஒருவர் பலி

அலங்காநல்லூர்:
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாட்டின் உரிமையாளருக்கு உதவியாக வந்த ஒருவர் கழுத்தில் காளை குத்தியதில் ஆபத்தான நிலையில் மதுரை  அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிறு அதிகாலை உயிரிழந்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் நவமணி (24). இவர் மாட்டின் உரிமையாளர் ஒருவரின் காளைகளை சேகரிக்கும் பகுதியிலிருந்து பிடித்துச் செல்ல காத்திருந்துள்ளார். அப்போது காளை ஒன்று நவமணியின் வலது கழுத்தில் குத்தியது. இதில் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நவமணி சிகிச்சைபலனின்றி ஞாயிறு அதிகாலை உயிரிழந்தார்.

;