tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மதுரை வைகையாற்றில் அதிமுக ஆட்சியில் செய்த அலங்கோலம்தான் அசம்பாவித சம்பவத்திற்கு காரணம்

மதுரை,ஏப்.20-  மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 2 பேர் உயி ரிழந்தனர்.  ஸ்மார்ட் சிட்டி என்ற  பெயரில் மதுரை வைகையாறு மற்றும் அதன் பகுதியில் அதிமுக ஆட்சியில் செய்த  அலங்கோல மான கட்டுமானங்கள்தான்  இது போன்ற அசம்பாவித சம்பவத் திற்கு காரணம் என்று சு.வெங்க டேசன் எம்.பி., குற்றம்சாட்டி யுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெத்தா னியாபுரத்தில் ஏப்ரல் 19 செவ்வா யன்று  கண்டனக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றி னார். அவர் பேசியதாவது: 

மதுரை சித்திரை திருவிழா பத்து நாட்களாக நடந்து முடிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா என்பது நடைபெறாத நிலையில் அதிகப்படியான மக்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பேசி அதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டன.   எனினும் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டு மரணங்கள் மற்றும் பதினோரு பேர் காயம டைந்துள்ளனர். இதிலிருந்து மாவட்ட நிர்வாகம் வரும் காலங்க ளில் படிப்பினையைக் கற்றுக் கொள்ளும். மேலும் மக்கள் பிரதி நிதிகளான எங்களுக்கும் அந்த கடமை உள்ளது.

நான் இதை இந்த இடத்தில் சொல்வதற்கான காரணம், இரண்டு  தினங்களுக்கு முன் சட்டமன்றத்தில்  இந்து சமய அறநிலையத்துறை மானிய கோ ரிக்கைக்கான கூட்டம் நடந்துள் ளது. அப்போது மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார்,  செல்லூர் ராஜு ஆகியோர் இந்த சம்பவத்தி ற்கு கடும் கண்டனத்தை தெரிவித் துள்ளனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்துக் கேட்கிறேன், இந்த குளறுபடிகள் அனைத்திற்கும் காரணம் யார்?. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருந்து 60 அடி தூரத்தில் தடுப்பணை கட்டியது யார்?.  கடந்த 400 ஆண்டுகளாக அதே இடத்தில் கள்ளழகர் இறங்குகிறார்.  அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண்ப தற்கு இலட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று கூறியுள்ளார் கள். இதுவரை அதற்கான கணக்கு என்பது இல்லை. இந்த ஆண்டு  நான் கூட்டத்தில் பேசும்போது எவ்வளவு மக்கள் பங்கேற்கி றார்கள் என்ற கணக்கு  எடுக்க வேண்டும்

என்று மாவட்ட நிர்வா கத்திடம் கூறினேன். ஏனென்றால் இதற்கு முன்பு 1971 - 72 ஆம் ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றார்கள் என்று கூறப் படுகிறது. ஆனால் இன்றைக்கு எத்தனை லட்சம் பேர் கூடுவார்கள்  என்ற கணக்கே இல்லை. தற்போது இந்த இடத்தில் தடுப்பணை என்பதை கட்டியுள்ளார்கள். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஆற்றின் இரு கரைகளிலும் பொது மக்கள் வரக்கூடிய பகுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு. கோ ரிப்பாளையத்தில் இருந்து வரக் கூடிய ஒரு வழி மட்டுமே உள்ளது. இதில் எப்படி மக்கள் சென்று வரு வார்கள்?. இப்படி மக்கள் வரக் கூடிய பாதையை அடைத்து அதி முகவினர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே தடுப்ப ணையை கட்டியுள்ளார்கள். இதற்கு தற்போது யார் கார ணம்?. அதிமுகவினர் தான் கார ணம் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக நான் கூறிக்கொள்கி றேன். 

மதவெறியர்கள்  குளிர்காய முடியாது

இன்றைக்கு பல வட மாநி லங்களில் இருந்து வந்தவர்கள் சித்திரை திருவிழாவில் புகைப் படங்கள் எடுத்து தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இங்கு இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ கடவுள், கள்ளழகர் வைணவ கடவுள். இந்த இரண்டையும் இணைத்து நடத்தும் இந்த திருவிழா போல் இந்தியாவில் சைவத்தையும் வைணவத்தையும் இணைத்து நடத்தும் திருவிழா வேறு எஙகும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் கள்ளழகர் திருக்கல்யாணம் முடிந்து விட்டதே என்று கோபித் துக் கொண்டு துலுக்க நாச்சியார் வீட்டுக்கு சென்று விடுகிறார். இந்த திருவிழா கடந்த 20 ஆண்டுக ளுக்கு முன்பு வரை நடந்துள்ளது. அங்குள்ள இஸ்லாமியர்கள் கள்ள ழகரை வரவேற்கும் திருவிழா என்பதும் நடைபெறும் என்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. அப்படி சைவம் ,வைணவம் மட்டு மல்ல இஸ்லாமையும் இணைத் ததுதான் எங்களுடைய திருவிழா. அதே போல் அன்றைக்கு தங்களு டைய குல தெய்வங்களை வைகை யாற்றில் வந்து வழிபட்டு செல் வோர் எத்தனை ஆயிரம் பேர். அப்படி ஒரு ஒற்றுமையை பறை சாற்றக் கூடிய திருவிழா .அந்த வரலாறு தெரியாமல் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அதை மறைக்கும் விதத்தில் இன்றைக்கு கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் இங்குள்ள நிர்வாகத்தின் சீர்கேடாக பார்க்கிறேன்.  இப்படி அனைத்து சமூகத்தி னரும் அனைத்து மதத்தினரும் ஒன்றுகூடியதுதான் எங்கள் மதுரையின் திருவிழா .தென் மாவட்டத்தின் திருவிழா .இதில் மத வெறியர்கள் குளிர்காய நினைத்தால் அதை நாங்கள் விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.