tamilnadu

img

நிதி பற்றாக்குறையை அதிகரித்த அதிமுக அரசு!

தமிழ்நாடு மாநில அரசின் மார்ச் 2020 ஆம் ஆண்டு உடன் முடிந்த நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை, சட்ட மன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவா தத்தின் கடைசி நாளன்று சமர்ப்பிக்கப் பட்டது. நான்கு அத்தியாயங்களாக தொகுக்கப் பட்டுள்ள சிஏஜி அறிக்கையின் முதல்  அத்தியாயம், நிதி நிலைமை குறித்ததா கும். அரசு கணக்குகளின் கட்டமைப்பு, வரவு- செலவு திட்ட நடைமுறைகள், முக்கிய குறி யீடுகள் மீதான பகுப்பாய்வு, பற்றாக்குறை மற்றும் மிகை உள்பட மாநிலத்தின் நிதி  நிலை குறித்த கண்ணோட்டத்தை வெளிப் படுத்தி இருக்கிறது‌. அதிமுக ஆட்சியில், 2015-16 ஆம் ஆண்டு  ரூ. 11,985 கோடி என்ற அளவில் இருந்த வரு வாய் பற்றாக்குறை 2019-20 ஆம் ஆண்டு களில் 35,909 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. குறிப்பாக, 2015 முதல் 20 வரைக்கும் ஐந்தாண்டுகளில் வருவாய் பற்றாக்குறை உயர்ந்து கொண்டே வந்ததையும் சிஏஜி அறி க்கை விரிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது.

அம்பலப்படுத்தும் அறிக்கை

இந்த வருவாய் பற்றாக்குறையை 2019-20  ஆண்டுகளுடன் நீக்குவது என்ற தமிழ்நாடு மாநில நிதி பொறுப்புடைமை மற்றும் வரவு-செலவு திட்ட மேலாண்மை சட்டம் (டிஎன்எப்ஆர்) கூறிய இலக்கையும் அதிமுக அரசால் எட்ட முடியவில்லை. மத்திய  கால நிதி திட்டம் கூறப்பட்ட அதற்கான வரம்பை (17,204 கோடி ரூபாய்) ஒட்டியும்  செயல்பட அதிமுக அரசு தவறி விட்டதை யும் இடித்துரைத்துள்ளது சிஏஜி. அது மட்டுமன்றி, ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது வருவாய் பற்றாக்குறை  மற்றும் கடன் வாங்கியது குறித்து எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது அன்றைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல் வம்,” கடன் வரம்பு தமிழ்நாடு மாநில நிதி பொறுப்புடைமை மற்றும் வரவு-செலவு திட்ட மேலாண்மை சட்டத்துக்கு உட்பட்டே இருந்து வருகிறது” என்றே கூறிவந்தார். அதிலும் உண்மை முழுமையாக இல்லை என்கிற ‘பொய் மூட்டைகளை’ இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை வெளிச்சம் போட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டுகளில் மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தியில் 3.26 அதிகரித்து வந்ததையும்,  என்டிஎஃப்ஆர் சட்டம் 2003இல் கூறிய மூன்று விழுக்காட்டை விட இது மிகவும் அதிகம் என்றும் நிதிப்பற்றாக்குறை முந்தைய ஆண்டுகளை விட 27.13 விழுக்காடு உயர்ந்து ரூ.60,179 கோடியாக அதிகரித்தது மட்டுமல்ல, இந்நிலை 2016-17 ஆம் ஆண்டு முதல் இருந்து வருவதையும் விரிவாக விவரித்துள்ளது. அதுமட்டுமன்றி, மாநிலத்தின் கடன் வரம்பு எல்லை மீறப்படவில்லை. என்டிஎஃப்ஆர் வழிகாட்டும் விதிமுறை களுக்குட்பட்டுதான் கடன் வாங்கப்படுகிறது. செலவு செய்யப்படுகிறது என்று கூறிய அதிமுக அரசு, தவறான வகைப்பாடுகள் மற்றும் சேம நல நிதியின் பங்களிப்பை குறைத்து, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை முறையே ரூ.1,008 கோடி மற்றும் ரூ.985 கோடியாக குறைத்து காட்டுவதற்காக செய்துள்ள ‘திருகு வேலை களையும்’ வெளிக்கொண்டு வந்துள்ளது சிஏஜி .

அதிமுகவின் சித்து விளையாட்டு!

போக்குவரத்து கட்டணம், டீசல்-பெட் ரோல் விலை உயர்வு என்று எதற்கெடுத்தா லும் அண்டை மாநிலங்களை ஒப்பிட்டுக் காட்டிய அதிமுக அரசு, மாநிலத்தின் சொந்த வரி, வருவாய் வளர்ச்சி விகிதம் 2019-20 ஆண்டுகளில் 1.83 விழுக்காடாக இருந்துள் ளது. இது பொதுப்பிரிவு மாநிலங்களின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்தை விட 2.12 விழுக்காடு இருந்து உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மாநிலத்தின் சொந்த வரி வரு வாய் 2019-20 ஆண்டுகளில் அதன் மொத்த  உற்பத்தி மதிப்பில் 5.82 விழுக்காடாகும். அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும்  கேரளாவைவிட மிக குறைவாக இருப்பதை யும் ஒப்பிட்டு சிஏஜி அறிக்கையின் இரண்டா வது அத்தியாயம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதேபோன்று, நமது மாநிலத்தில் வரி யில்லாத வருவாய் முந்தைய ஆண்டு களைக் காட்டிலும் 2019-20 ஆண்டில் 1,312 கோடி ரூபாய் குறைந்துவிட்டது. மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்களில் இதன் பங்கு 2018-19 ஆம் ஆண்டுகளில் 11.8 விழுக்காடாக இருந்துள்ளது. இதுவே,  2019-20 ஆம் ஆண்டில் 10.71 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய கார ணம், வருவாய் நிலுவையை வசூலிக்கவும் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க முனைப்பு காட்டாமல் 10 ஆண்டுகால ஆட்சியை அதிமுக நிறைவு செய்து உள்ளதால், நிலு வையில் இருக்கும் நீதியை வசூலிக்கவும் வரி ஏய்ப்பை கண்டிபிடித்து முறைப் படுத்தவும் வலுப்படுத்தவும் தமிழக அரசு  முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் இந்திய கணக்காய்வு மற்றும் தணி க்கைத் துறை தலைவர் அறிவித்துள்ளார்.

பெரும் ஏற்றத்தாழ்வு!

வருவாய் வகை செலவுகளின் வளர்ச்சி 2015-16 ஆம் ஆண்டுகளில் 26 விழுக்காடாக இருந்தது. அதுவே, 2019- 20 ஆம் ஆண்டுகளில் 6.71 விழுக்காடாக குறைந்து பெரும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து கொண்டு வருவதையும், வரையறுக்கப் பட்ட பங்களிப்பு முறை ஓய்வூதிய திட்டம்  எனும் புதிய ஓய்வூதிய திட்டம் துவக்கப் பட்டு 16 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த  திட்டத்திற்கு நிதி மேலாளரை இதுவரை யிலும் அமர்த்தாமல் உள்ளதையும் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ள சிஏஜி,  “பங்களிப்பு முறை ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு தனது பங்களிப்பை குறைத்து விடாமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்” என்றும் அரசுக்கு கட்டளை யிட்டு இருக்கிறது.

அதிகார வரம்பு-விதிகள் மீறல்!

முந்தைய அதிமுக ஆட்சியில், மூல அல்லது துணை,மறு ஒதுக்கீடுகளில் நிதி ஒதுக்காமலும் இறுதி திருத்திய ஒதுக்கீடு இல்லாமலும் 30 நேர்வுகளில் மொத்தம் ரூபாய் 130.71 கோடி செலவழித்து இருப்ப தையும், மூல அல்லது துணை ஒதுக்கீட்டில் சட்ட மன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் 14 நேர்வுகளில் மொத்தம் 1.80 கோடி ரூபாயை செலவு செய்திருக்கும் எடப்பாடி அரசின் வரம்பு மீறிய நடவடிக்கைகளையும் சிஏஜி வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தொழிலாளர் மேல் வரியை மாநில தொகுப்பு நிதியில் உரிய கணக்கு தலைப்பின் கீழ் சேர்க்காமல் நேரடியாக தமிழ்நாடு கட்டு மான நல வாரியத்தின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது. இது இந்திய அரசி யலமைப்பு சட்டம் பிரிவு 266 (1) மீறுவதாகும்.  இதன் விளைவாக மாநில தொகுப்பு நிதியில் மேல் வரிக்கான குறிப்பிட்ட கணக்கு தலை ப்பு இல்லாத நிலையில் மேல் வரி வசூலிக்கும்  அமைப்புகளால் எவ்வளவு தொகை வசூ லிக்கப்பட்டது? அதில் எவ்வளவு தொகை தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்திற்கு மாற்றப்பட்டது? என்பதை அறியமுடியாத நிலை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை  தலைவரின் அறிக்கை, வரும் காலங்களில் தொழிலாளர் மேல் வரியை தமிழ்நாடு கட்டு மான நல வாரியத்திற்கு மாற்றும் முன்பு மாநி லத்தின் தொகுதியில் சேர்க்குமாறு அர சுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. பல்வேறு மானியங்களின் கீழ் தலா ரூ‌.100  கோடிக்கு மேல் 36 நேர்வுகளில் 26,404 கோடி  ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு உரு வாவதை குறைத்து பிற வளர்ச்சிப் பணி களுக்கு பயன்படும் வகையில் தகுந்த ஒரு கட்டுப்பாட்டு முறையை அரசு உருவாக்க  வேண்டும் என்றும் 2012 -19 ஆண்டுகளில் ரூ. 2,658 கோடி அதிகபட்சமாக செலவழித்து அதையும் முறைப்படுத்தவில்லை என்பதையும்  மூன்றாவது அத்தியாயத்தில் சுட்டிக்காட்டி உள்ளது.

- சி. ஸ்ரீராமுலு