கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் திட்டத்தை கைவிடக் கோரி ஞாயிறன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் அருகில் துவங்கிய பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார். திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உட்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.