tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட அனுசுயா குடும்பத்தினருக்கு சிபிஎம் தலைவர்கள் நேரில் ஆறுதல்

கிருஷ்ணகிரி,ஏப்.26- கிருஷ்ணகிரியில் நடந்த சாதி ஆணவப் படுகொலை தமிழ்நாடு  அதிர்ந்த சம்பவம்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை தமிழ கத்தின் பல அரசியல் கட்சி தலை வர்கள்  சந்தித்து ஆறுதல்  கூறி வந்துள்ளனர். பெற்ற தந்தையே சாதியின் வன்மத்தால் மகனை யும் பத்து மாதம் தன்னை சுமந்த  தாயையும் சேர்த்து படுகொலை செய்து விட்டு, தன் மகனை  மணந்த மருமகளை தாறுமாறாக  வெட்டி அவள் இறந்துவிட்டால் என்று  நினைத்து சென்றுவிட்டார். பொதுமக்கள் உதவியோடு  சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அனு சுயா.  அரியலூர் மாவட்டம் ஜெயங்  கொண்டம் ஒன்றியம் கொல்லாபு ரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனு சுயா பட்டதாரி பெண். காதலித்து  திருமணம் செய்து கொண்டு ஆறு  மாத காலம் குடும்பம் நடத்திய பிறகு ஆசை வார்த்தை கூறி தன்  வீட்டிற்கு அழைத்து வந்து கொடூர மான இச் செயலை அரங்கேற்றி உள்ளார் சுபாஷின் தந்தை.  கணவனை இழந்து படுகாய மடைந்து சேலம் மருத்துவமனை யில்  சிகிச்சை பெற்று வரும் அனு சுயாவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ் . வாலண்டினா, அரியலூர் மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.  மணிவேல், எம். வெங்கடாசலம்,

மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி. அம்பிகா, மாவட்டத் தலைவர்  பி. பத்மாவதி, விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், சேலம் மாவட்ட மாதர் சங்க செயலாளர் தேவி, சேலம் மாநகர மேற்கு செயலாளர் கனக ராஜ் உள்ளிட்டோர் சந்தித்து ஆறு தல் கூறினர்.  இரண்டு கைகளிலும் பல மான கட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில அறுவை சிகிச்சைகள் செய்ய  வேண்டி உள்ளது என மருத்து வர்கள் கூறினர். தலையிலும் முகத்திலும், தோள்பட்டை, மார்  பகம் என எங்கு பார்த்தாலும் கத்தி  வெட்டு. நூற்றுக்கணக்கான தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில் உற்றார் உறவினர்கள். மருத்துவர்களின் நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகள் தன்னை பார்க்க வரும் ஆளுமைகளின் தைரியத்தால் மீண்டு வருவோம் என்று உறுதியோடு அனுசுயா  இருப்பதை காண முடிந்தது. அனு சுயாவின் பெற்றோரும் குற்ற மிழைத்தவனுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே தங்களின்  கோரிக்கை என்றும்  என் மகளைப்  போல இனி ஒரு பெண் பாதிக்கப் படக்கூடாது. இதுவே கடைசி ஆணவ படுகொலையாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அதற்கான வழி வகுக்க வேண்டும் என்று இரு கரம் கூப்பி  கேட்டுக் கொண்டனர்.  

பொதுவாக பாதிக்கப்பட்ட வர்கள் யாராக இருந்தாலும் பிழைத்தால் போதும் பாதுகாப் பாக இருந்தால் போதும் எப்படி யாவது மீண்டும் தங்களுடைய வாழ்க்கை  சகஜமான நிலை மைக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கும் சூழ்நிலையில் சமூகத்தில் நிலவுகிற இப்ப டிப்பட்ட சாதிய ஆணவ படு கொலைக்கு முடிவு கட்ட வேண்  டும் என்று சொல்லுகிற உணர்வு  அனுசுயாவின் பெற்றோர், உற வினர்களிடம் காண முடிந்தது. தமிழக அரசு இப்படிப்பட்ட ஆணவப் படுகொலைக்கு உள்  ளாக்கப்பட்டிருக்கிற நூற்றுக்க ணக்கான பெற்றோர்கள், பாதிக் கப்பட்ட மனைவி, கணவன் அல்  லது உறவினர்களிடம் ஒரு  ஆய்வை நடத்தி அவர்களின்  உளப்பூர்வமான ஆதங்கங் களை புரிந்து கொண்டு சாதிய ஆணவப் படுகொலைக்கு ஒரு சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். கோரிக்கைகளை முன்வைத்தும் சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்  றும் வலியுறுத்தி   அனுசுயாவின்  சொந்த கிராமமான கொல்லா புரத்திற்கு அருகில் ஜெயங் கொண்டம் கூட்டு ரோட்டில்  3. 5. 2023 அன்று  கிராம மக்களோடு இணைந்து  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆர்ப் பாட்டத்தை நடத்த உள்ளது.  போராட்டத்தில் அனுசுயா வின் பெற்றோரும் கலந்து கொள்  கின்றனர். அவர்களுக்கு ஆதர வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றும்  இருக்கும் என்ற உத்தரவாதத்தை அனு சுயாவிற்கும் அவருடைய பெற்  றோருக்கும் கட்சியினர் கொடுத்த னர்.