tamilnadu

img

எல்ஐசியை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்திடுக!

மாமல்லபுரம், ஏப்.12- எல்ஐசி நிறுவனத்தை பொதுத்துறையாகப்  பாதுகாத்திட வேண்டும் என முகவர்கள் சங் கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 4வது மாநில மாநாடு ஏப்ரல்  11, 12 ஆகிய தினங்களில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தோழர் ஏ.ஜெய ராமன் நகரில் தோழர் எஸ்.சுத்தானந்தம் நினை வரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அ. பூவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது நாள் மாநாட்டைத் துவக்கி வைத்து சிஐடியு மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார் பேசினார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல  துணைத் தலைவர் க.சுவாமிநாதன் சிறப்பு ரையாற்றினார். மாநாட்டை நிறைவு செய்து முக வர்கள் சங்கத்தின் தென்மண்டல தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.வி.பெல்லார்மின் பேசினார். சென்னை கோட்ட தலைவர் வி.நாகலிங்கம் நன்றி கூறினார்.

எல்ஐசி நிறுவனத்தை தொடர்ந்து பொதுத்  துறை நிறுவனமாகப் பாதுகாத்திட வேண்டும்;  ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலை யை உடனடியாக குறைக்க வேண்டும்;  உயர்ந்து வரும் மருத்துவ செலவுகளைக்  கருத்தில் கொண்டு அனைத்து முகவர்களுக் கும், குடும்பத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு  வழங்க வேண்டும்; பாலிசி தாரர்களுக்கு போனஸ் விகிதத்தை உயர்த்தி வழங்க  வேண்டும்; முகவர்களுக்குக் குழு காப்பீட்டுக்  கான வயது வரம்பை நீக்க வேண்டும்; குழு காப்பீடு தொகையினை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்; முகவர்களுக்கு பணிக்கொடை கணக்கீட்டு முறையை மாற்றி  அமைத்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்; கேரள மாநிலத்தைப் போல் அமைப்பு சாரா தொழிலாளர்களாக அங்கீக ரித்து நலவாரிய பயன்களை அனைத்து முக வர்களுக்கும் வழங்கிட வேண்டும்; அனைத்து முகவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும்  குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங் கிட வேண்டும்; மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூ தியம் வழங்கிட வேண்டும்; தொழிலாளர்கள் தொகுப்பு சட்டம் நான்கையும் திரும்பப் பெறு வதுடன், மின்சார திருத்த மசோதா 2022ஐயும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். சங்கத்தின்  மாநிலத் தலை வராக அ.பூவலிங்கம், பொதுச் செயலாள ராக எஸ்.ஏ.கலாம், பொருளாளராக கே. தாமோதரன் உள்ளிட்ட 51 பேர் கொண்ட மாநி லக்குழு தேர்வு செய்யப்பட்டது.