கோயம்புத்தூர், மார்ச் 12- “கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறி யாக இருந்தாலும் ஆடை உற்பத்தி நெசவா ளர்களுக்கு உதவி செய்வதை எனது கடமை யாக கருதுகிறேன். நூல் விலையை கட்டுப் படுத்த உறுதியான நடவடிக்கையை மேற் கொள்வேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடந்தது. விசைத்தறி நெசவாளர் களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தியது, ஆயிரம் யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தும் கூடுதல் யூனிட்க்கு உயர்த்தப்பட்ட கட்டணத்ததில் 70 பைசா குறைப்பு, கைத்தறி நெசவாளர் களுக்கு இலவச மின்சாரத்தை 300 யூனிட் டாக உயர்த்தியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், “கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும் ஆடை உற்பத்தி நெசவாளர்களுக்கு உதவி செய்வதை எனது கடமையாக கருதுகிறேன்
கொரோனா பெருந்தொற்று, நூல் விலை யேற்றம் என்ற தாக்குதலில் சிக்கி இருந்த நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தது. நெசவா ளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல் படுத்தியுள்ளோம். சிறந்த நெசவாளர், சிறந்த ஏற்றுமதியாளர், சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கைத்தறி, கைவினைப்பொருட்கள் காட்சியகம் அமைக் கும் பணிகள் நடந்து வருகிறது. வேட்டி , சேலை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் நெசவாளர் கூட்டு றவு சங்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இவை எல்லாம் 20 மாதங்களில் நிறை வேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தான். திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விலையில்லா மின்சாரம் கைத்தறி களுக்கு 300 அலகுகளாகவும், விசைத்தறி களுக்கு 1000 அலகுகளாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால், அரசுக்கு ஆண் டுக்கு 53 கோடி ரூபாய் கூடுதல் செலவீனம் ஏற்படும். இதை செலவாக நினைக்க வில்லை. நெசவாளர்கள் புத்துயிர் பெற வும், அதிகமாக உற்பத்தி செய்யவும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மின்கட் டண குறைப்பால் நெசவாளர்களுக்கு கணி சமான தொகை மிச்சமாகும்.
படிப்படியாக...
தொழிலை வளர்ச்சியடைய செய்யும் முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. 5 லட்சம் விசைத்தறிகளில் பணியாற்றும் 10 லட்சம் தொழிலாளர்களை காக்கும் கடமை அரசிற்கு உண்டு. நெசவாளர்களுக்கு அச்சு றுத்தலாக உள்ள நூல் விலையை கட்டுப் படுத்த உறுதியாக நடவடிக்கை எடுப்போம். அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவையான துணிகள் கொள்முதல் செய் தல், அரசின் நிபுணர் குழுக்களில் நெசவா ளர்கள் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள் ளிட்டவை முறையாக பரிசீலிக்கப்பட்டு படிப் படியாக உறுதியாக நிறைவேற்றப்படும். ஜவுளித்துறைக்கு ஆணி வேராக நெசவுத் தொழில் உள்ளது. நெசவுத் தொழிலில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ் நாட்டில் பல பகுதிகளில் ஜவுளிப்பூங்காக்கள் உருவாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக் கப்பட உள்ளது. நெசவு தொழிலுக்கு முக்கி யத்துவம் வழங்கும் வகையில் தறி தொழிற் சாலை தனியிடத்தில் அமைத்து சலுகைகள் வழங்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மண்ட லத்தில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி மூலம் அந்த நிலைமை மாறியுள்ளது. மேற்கு மண்ட லத்தில் செல்வாக்கு இருப்பதாக மார் தாண்டிக் கொண்ட அதிமுக என்ன சாதனை செய்துள் ளது? தொழில் வளர்ச்சிக்காக எதுவும் செய்ய வில்லை.சிறு, குறு நடுத்தர தொழில்களை அரசு ஊக்குவித்து வருவதால், இளை ஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்த அமைதியான மாநிலமாக உள்ளது. இது சிலரது கண்களுக்கு பொறுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
எழுந்த வேகத்தில் அமுங்கும் பொய்கள்
புதையல் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்ன சின்ன இழை பின்னிப்பின்னி என்ற பாடலை முதலமைச்சர் பாடினார். தொடர்ந்து பேசிய அவர், “ஒற்றுமையாக மக்கள் அனைவரும் வாழும் மாநிலம். அதை வதந்தி, பொய்களால் சிலர் சிதைக்க பார்க்கி றார்கள். வதந்தி, பொய்களால் கலங்கத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அவை எழுந்த வேகத்தில் அமுங்கி விடுகின்றன. மக்களை திசை திருப்ப தந்திரங்களாக பொய்களை யும், வதந்திகளையும் பயன்படுத்துகின்றனர். என் பொது வாழ்க்கையில் இதுபோன்ற எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்து விட்டேன். இந்த சலசலப்பிற்கு எல்லாம் அஞ்சமாட்டேன். போற்றுவோர் போற் றட்டும். தூற்றுவோர் துற்றட்டும். நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள், சு. முத்து சாமி, மு.பெ. சாமிநாதன், வி. செந்தில் பாலாஜி, ஆர். காந்தி, என். கயல்விழி செல்வ ராஜ், கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்தி குமார் பாடி மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் விசைத் தறி உரிமையாளர் கூட்டமைப்பின் நிர் வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.