ஜூன் 26இல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், ஜூன் 19- இளம்பெண்ணை மானபங்கம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் பார்வதி புரம் மாவட்டகுழு அலுவலகத்தில் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. மாதவன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முரு கேசன், ஆர்.லீமாறோஸ், ஏ.வி.பெல்லா ர்மின், எம்.அண்ணாதுரை, என்.உஷாபாசி, எஸ்.ஆர்.சேகர், கே.தங்கமோகன், எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், எம்.ஏ.உசேன், என்.எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பளுகல் பகுதியில் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதி யாக வன்புணர்வு செய்து பின்னர் கருக்க லைப்பில் ஈடுபட்ட பளுகல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவ டிக்கை எடுத்திட வலியுறுத்தி ஜூன் 26 ஆம் தேதி நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்ட த்தில் ஆர்ப்பாட்டம் நடத்திடவும், அமெ ரிக்காவின் இனவெறியை கண்டித்து ஜூன் 23 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் வட்டார அள வில் போராட்டம் நடத்திடவும், டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இயக்கம் நடத்தவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.