சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்!
சென்னை, ஜூன் 17 - திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்க த்தில் நடந்த சிறுவன் கடத்தல் வழக் கில் கைது செய்யப்பட்டுள்ள ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்ற உத்தர வின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் ஆகி யோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் நீதிமன்ற வளா கத்தில் வைத்தே கைது செய்யப் பட்டார். அவரிடம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் இரவு முழுவதும் விசார ணை நடத்தப்பட்டது. இந்நிலையில், காவல்துறையின் பரிந்துரையின் பேரில் உள்துறைச் செயலாளர் அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேல்முறையீடு தன்னை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஏ.டி.ஜி.பி. ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறை யீட்டு வழக்கை புதனன்று (ஜூன் 18) பட்டியலிட்டு விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.