சென்னை, அக். 20 - உயரம், வளர்ச்சி தடைப்பட்டோரை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கக் கோரி வியாழனன்று (அக்.20) மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளில் ஒருபகுதி யினராக உயரம், வளர்ச்சி தடைப்பட்டோர் உள்ளனர். ஆண்களில் 4.2 அடிக்கும், பெண்களில் 3.8 அடிக்கும் குறைவானவர்கள் உயரம் வளர்ச்சி தடைப்பட்டோராக கருதப்படுகின்றனர். அக்.25 அன்று உயரம் வளர்ச்சி தடைப்பட்டோர் உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, விண்ணப்பித்த அனை வருக்கும் உயரம் வளர்ச்சி தடைப்பட்டோர் அடையாளச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும், பட்டம் பெற்றவர் களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும், இவர்களுக்கு உகந்த வகையில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். பேருந்துகளின் படிக்கட்டுகளை தாழ்வாக அமைத்திட வேண்டும், ரயில் பேருந்து நிலையங்களில் தாழ்வான டிக்கெட் கவுண்டர்களை ஏற்படுத்த வேண்டும், பொதுக் கழிப்பிடங்களை இவர் களுக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆட்சி யர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் இந்த இயக்கத்தை நடத்தியது.
இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டங் கள் சார்பில், ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவை சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு துணை ஆட்சியர் கியூரி மனுவை பெற்றுக் கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி, “உயரம் வளர்ச்சி தடைப்பட்டோரை கடும் ஊனமுற்றவர்களாக அறிவித்து, 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வழங்க வேண்டும். அரசு அலுவலகம், இவர்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகள் சிறப்பம்சத்தோடு கட்ட வேண்டும்”என்றார். பேருந்துகளில் மாற்றுத்திறனாளி களுக்கு 2 இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது. கூடுதலாக உயரம் குறைவான சிறப்பம் சத்தோடு ஒரு இருக்கை அமைக்க வேண்டும். உயரம் வளர்ச்சி தடைபட்டோருக்கு அனை த்து வகையிலும் தடையற்ற சூழலை உரு வாக்க வேண்டும். சமூகத்தின் பார்வையில் கேலி, கிண்டலுக்கு உரியவர்களாக பார்ப்ப தை மாற்ற வேண்டும். பொருளாதார ரீதி யாக இவர்கள் முன்னேற வேலைவாய்ப்பு, வருமானம்,
வீடு ஆகியவற்றை உறுதிப் படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த இயக்கத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜீவா, துணைத் தலைவர் கே.பி. பாபு, மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் எஸ்.மனோன்மணி, வடசென்னை மாவட் டத் தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராணி, தென் சென்னை மாவட்டச் செயலா ளர் எம்.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடந்த இயக்கத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் வில்சனும், தருமபுரியில் மாநிலப் பொருளாளர் கே.ஆர். சக்கர வர்த்தியும் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, சிவகங்கை, புதுக் கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடு துறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணா மலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் அனை த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இந்த இயக்கம் நடைபெற்றது.