திருவனந்தபுரம், ஜுன் 23- கடலில் காணாமல்போன மீன் தொழி லாளியை மீட்க தீவிர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அஞ்சு தெங்கு பகுதியைச் சேர்ந்தவர் மீன் தொழி லாளி கார்லோஸ். கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவரை காணவில்லை என உற வினர்கள் தெரிவித்துள்ளனர். அவரை மீட் கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாக முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்துள்ளார். கடற்படை, கடலோர காவல் படை, கடலோர காவலர்கள் ஆகியவற் றின் கூட்டுக்குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஞாயிறன்று காலை எட்டு மணிக்கு இந்த குழு புறப்பட்டதாகவும் கண்டுபிடிக்கும் வகையில் தேடுதல் தீவி ரமாக நடப்பதாகவும் முதல்வர் தெரிவித் தார்.