சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டப் பேரவை யில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்கள், நெல்லை மாஞ்சோலை தோட்டத் தொழி லாளர்கள் பிரச்சனை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய வனத்துறை அமைச்சர் மா. மதி வேந்தன், “நெல்லை மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தல்படி அரசு நட வடிக்கை எடுக்கும்” என்றும் “யானை வழித்தடங்கள் குறித்த மக்கள் கருத்து களை கேட்டறிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்” எனவும் கூறினார். அதைத் தொடர்ந்து புதிய அறிவிப்பு களை வெளியிட்ட அமைச்சர், “மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக் கட்டளையில் உள்ள சமூக அடிப்படையில் ஆன அமைப்புகள் மூலம் ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படை யிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
மரங்கள் பாதுகாப்புச் சட்டம்!
நகர மயமாக்கல், தொழில்மய மாக்கல் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டும் அரசு நிலங்களை பொருளா தார ரீதியாக பயன்படுத்துவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வனப்பரப்பு மற்றும் மரப்பரப்புகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு மரங்கள் (அரசு நிலங்கள்) பாதுகாப்புச் சட்டம் 2004 முன்மொழி கிறது. இதன்மூலம் நாட்டின் புவியியல் பரப்பில் 33 விழுக்காடு பணம் அல்லது பசுமை போர்வை அவசியம் என்ற தேசிய இலக்கை அடைய இந்த அரசு உறுதியாக உள்ளது. எனவே அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான விரிவான விதிமுறை களை வகுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க இச்சட்டம் உதவும். புதிய மாநில வனக் கொள்கை! தமிழ்நாடு மாநில வனக் கொள்கை 2018-இல் வெளியிடப்பட்டது. இது மாநிலத்திற்குள் வன வளங்கள், மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் உத்திகளை கோடிட்டு காட்டுகிறது. இந்த நிலையில், வனப் பாது காப்பை மேம்படுத்துவதற்கும் காடு களை மீட்டெடுப்பதற்கும் புதிய பரி மாணங்களை கொண்டு வருவதற்கும் புதிய தமிழ்நாடு மாநில வனக் கொள்கை 2004 இந்த அரசால் வெளியிடப்படும்.
கொல்லிமலையில் ‘இரவு வான்’ பூங்கா!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் இரவு வானத்தின் உள்ளார்ந்த வனப்பை இயற்கை கலாச்சார மற்றும் வரலாற்று வளமாக அங்கீகரிக்கும் வகையில் ஒரு கோடி ரூபாய் செலவில் இரவு வான்பூங்கா அமைக்கப்படும். கோவை வன உயர் பயிற்சியக மரபியல் பிரிவில் பூர்வீக இன விதை பெட்டகம் ரூ. 10 கோடியில் நிறுவப் படும். தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதி களில் ஆமைகளை பாதுகாக்கும் வகை யில் வருடத்திற்கு ஒரு கோடி மதிப்பீட்டில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப் படுவார்கள். தஞ்சாவூர் கோட்டம், கும்பகோணம் சரகம், அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் ரூ. 2.5 கோடியில் அமைக்கப்படும். கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்கள் மூணு கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.