இந்திய மாணவர் சங்க நிர்வாகி நேச மணி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி இந்திய மாணவர் சங்கம் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய மாணவர் சங்க நிர்வாகி கிஷோர் முன்னிலை வகித்தார். நிறைவாக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.