கோவை, டிச. 30- ஒற்றுமையாக வாழும் மக்களிடம் சாதி பிரச்சனையை உருவாக்கும் பாஜக எங்கள் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாது என பாஜக கொடி மரத்தை நடுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சி பகுதியில் காந்தி காலனி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 2ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரு கின்றனர். இங்கு அண்மையில் பாஜகவின் கொடி மரத்தை மர்ம நபர்கள் நட்டுள்ள னர். ஏற்கனவே இக்கிராமத்தில் பாஜக வின் மீது எதிர்ப்பு இருக்கும் நிலையில், யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக குழி பறித்து கொடி மரத்தை நட்டுவிட்டு சென்றுள்ளனர். விடியற்காலையில் பாஜக கொடி மரம் இருப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். உடனடியாக இக்கொடி மரத்தை அகற்ற வேண்டும் என ஊர் மக்கள் ஒன்றாக கூடியுள்ளனர். இதனை யறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் மற்றும் வருவாய்த்துறை வட்டாட்சி யர் கிராம மக்களிடம் சமரசம் பேசி யுள்ளனர். ஆனால், ஒருபோதும் இங்கு இந்த கட்சியை அனுமதிக்க முடியாது, உடனடியாக இந்த கொடி மரத்தை அகற்ற வேண்டும் என உறுதியோடு தெரிவித்து, அனைவரும் வெள்ளைத் தாளில் பாஜக கொடி மரத்தை அகற்ற வேண்டும் என கையெழுத்திட்டு புகார் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் முன்னிலையில் அரசு அதி காரிகள் கொடி மரத்தை அகற்றினர்.
இதுகுறித்து இக்கிராம மக்கள் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவினர் ஒற்றுமையாக இருந்த இப்பகுதியில் சாதிய பிரச்சனை யை உருவாக்கினார்கள். மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழாவில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு ரகளை செய்தனர். இத னால் பாஜக வேண்டாம் என முடி வெடுத்தோம். நமது இளைஞர்கள் இக்கட்சியில் சேர்ந்தால் கெட்டுப் போய்விடுவார்கள், பிரச்சனை ஏற்படும் என்பதால், கொடிக் கம்பம் வேண்டாம் என ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து புகார் அளித்தோம். எங்கள் பகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகிய கட்சிகளின் கொடி கம்பம் ஏற்கனவே இருக்கிறது. இக்கட்சி களால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக கட்சியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது
என்று பிரச்சனை செய்தார்கள். ஆகவே, அப்போதே பாஜக கட்சி வேண்டாம் என ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது. இப்பகு தியில் விநாயகர் சதுர்த்தி விழாவும் இதுவரை கொண்டாடப்பட்டதில்லை. பாஜக வந்தால் தீண்டாமைப் பிரச்ச னை தலைதூக்கும் என்பதால் வேண்டாம் என மக்கள் புறக்கணிக் கிறோம் என்றனர். முன்னதாக, பாஜக கொடி மரத்தை நட முயன்று சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக சின்ராசு, சேகர், கனக ராஜ் ஆகியோர் மீது பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத் தக்கது. கோவை, நீலகிரி மாவட்ட நாடாளு மன்றத் தொகுதிகளை மையப்படுத்தி பாஜக தேர்தல் பணியை இப்போதே துவக்கிவிட்டது. இதற்காக தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் முகாமிட்டுள்ள னர். கோவை மாவட்டம், 20 சதவீதத் திற்கும் அதிகமான அருந்ததிய மக்கள் வசிக்கிற மாவட்டமாகும். தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகள் என்பதால் பாஜவினர் தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கைக் குரிய கட்சி என்கிற நாடகத்தை அரங் கேற்ற முயல்கின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தான் பாஜக தேசிய தலைவர் நட்டா கோவை வருகையின் போது நல்லி செட்டிபாளையம் பகுதி யில் தலித் ஒருவரின் வீட்டில் உண வருந்துவது என்கிற ஒரு காட்சியும் திட்டமிடப்பட்டு படமாக்கப்பட்டது. அங்கும், பலர் எதிர்ப்பு தெரிவித் திருந்தது குறிப்பிடத்தக்கது.