tamilnadu

img

களியக்காவிளை அருகே சுமார் 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை, ஜன.8- வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ்  தலைமை யில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார்   கொண்ட குழுவினர்  ஐரேனிபுரம் பகுதியில் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்  போது சந்தேகத்துக்கு இட மாக  சொகுசு கார் ஒன்று  வந்  துக்  கொண்டிருந்தது  அந்த  காரை நிறுத்து மாறு சைகை  காட்டினர் இருந்தும் அந்த  கார் நிறுத்தாமல் சென்றுவிட் டது. தொடர்ந்து சுமார்  2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று  காப்பிக்காடு பகுதி யில்  காரை மடக்கி பிடித்த னர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 800  கிலோ ரேஷன் அரிசி இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது.   இந்த ரேஷன் அரிசியை கேர ளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.பிறகு   காரில்  இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல்  காரை வட்டாட்சியர் அலுவலகத்தி லும் ஒப்படைத்தனர்.  தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.