tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டியதை உறுதிப்படுத்துக!

சென்னை, டிச.2 - குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க கோரி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் தொழிற்தாவா எழுப்பி இருந்தது. இதனிடையே, ஓய்வூதியர் மற்றும் பணியில் உள்ள தொழிலாளர்கள் பிரச்சனைகளை முன்வைத்து நவ.22 அன்று பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தியது. இதனையடுத்து தொழிலாளர் துறை இணை ஆணையர் யு.உமா காந்தன் டிச.2ம் தேதி (டிச.2)  முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். இதில் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார், வி.தயானந்தம்  மற்றும் எம்எல்எப், டிடிஎஸ்எப் தலை வர்களும், நிர்வாக தரப்பிலிருந்து சட்டப்பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அ.சவுந்தரராசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஓய்வு பெற்றவர்களுக்கு 85 மாத  அகவிலைப்படி நிலுவை, ஓய்வு பெற்று 2 ஆண்டுகளாகியும் கூட  ஓய்வுக்கால பலன்களை வழங்காமல் உள்ளனர். பணியின்போது இறந்த வர்கள், ஓய்வு பெற்ற பிறகு இறந்த வர்களுக்கு கூட பணப்பயன்களை வழங்க மனமில்லாமல் இருக்கின்ற னர். இதனை கண்டித்து நவ.22 அன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அதனைத்தொடர்ந்து தொழிலாளர் ஆணையர் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் பதில் சொல்லக் கூடிய நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர் போன்றோர் வரவில்லை. சட்டப்பிரிவில் இருந்து வந்தவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. எனவே, அந்தப் பிரச்சனைகளில் எதுவும் பேசவில்லை. 3 ஆண்டு தாமதத்திற்கு பிறகு  14வது ஊதிய ஒப்பந்தம் கையெழுத் தானது. அதில், வேலைநிறுத்தம் நடைபெற்ற 21 நாட்களை முறைப்படுத்த வேண்டும் என்று உள்ளது. அதற்கு மாறாக, வேலை நிறுத்தம் அல்லாத 3 நாட்களை சேர்த்து குளறுபடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதனை சரி செய்யாமல் உள்ளனர். 7மாத ஊதிய நிலுவையை வழங்காமல் உள்ளனர். ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டதை கூட அமல்படுத்தாமல் உள்ளனர்.

தொழிலாளர்கள் 20 விழுக்காடு போனஸ் பெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக 10 விழுக் காடு தருகிறார்கள். இதனை ஏற்க முடியாது. போனஸ் கணக்கிடும் போது, மாத ஊதியம் 7 ஆயிரம்  ரூபாய் அல்லது அந்த தொழிலில் உள்ள குறைந்தபட்ச ஊதியம் இவற்றில் எது அதிகமோ அதை வைத்து கணக்கிட வேண்டும். இதன்படி கணக்கிட்டால் 8.33 விழுக்காட்டிற்கே 13 ஆயிரத்து 500  ரூபாய் தந்திருக்க வேண்டும். ஆனால்  8ஆயிரத்து 600 ரூபாய் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். 20 விழுக்காடு போனஸ் வழங்கினால் ஒரு தொழிலா ளிக்கு 28 ஆயிரம் ரூபாய் வரை  கிடைக்கும். நிர்வாகம் தொழிலா ளர்களை ஏமாற்றி வருகிறது.

 இதன்படி கணக்கிட்டால் 8.33 விழுக்காட்டிற்கே 13 ஆயிரத்து 500  ரூபாய் தந்திருக்க வேண்டும். ஆனால்  8ஆயிரத்து 600 ரூபாய் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். 20 விழுக்காடு போனஸ் வழங்கினால் ஒரு தொழிலா ளிக்கு 28 ஆயிரம் ரூபாய் வரை  கிடைக்கும். நிர்வாகம் தொழிலா ளர்களை ஏமாற்றி வருகிறது. 85 மாத அகவிலைப்படி நிலு வையை வழங்க நீதிமன்றம் உத்தர விட்டதற்கு நிர்வாகம் தடை உத்தரவு வாங்கியுள்ளது. எனவே, ஓய்வூதியர் பிரச் சனையையும், போனஸ் விவகாரத் தையும், ஒப்பந்தப்படி வழங்க வேண்டியவற்றையும் வழங்க வேண்டும். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் ஜன.6 அன்று விசாரணைக்கு வர உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த  சவுந்தரராசன், “நிர்வாக இயக்கு நர் போன்ற அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. அடுத்த முறை பொறுப்பான அதிகாரிகள்தான் வர வேண்டுமென்று தொழிலாளர் ஆணையர் கடுமையாக கூறினார். தேர்தல் வாக்குறுதி, ஒப்பந்தம் ஆகிய வற்றை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், “ஓய்வூதியர் பிரச்சனைக் காக வேலை நிறுத்தம் செய்தபோது, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 487 கோடி ரூபாய் வழங்க அதிமுக அரசு  அரசாணை வெளியிட்டது. அதிலும் தாமதமாக 240 கோடியை மட்டுமே கொடுத்துள்ளனர். இதில் எந்த நியாயமும் இல்லை” என்றார்.