tamilnadu

img

தோழர் எம்.பி.கே. எனும் மக்கள் போராளி

கீழத்தஞ்சை பண்ணையடிமை மக்களின் வரலாற்றை ஆய்வு  செய்யும் எவரும் எளிதில் கடந்து செல்ல முடியாத இரண்டு வார்த்தைகள் சாணிப் பால், சவுக்கடி. பன்னெடுங்காலமாக  பண்ணை அடிமைமுறையில் இருந்து  வந்த மனிதத்தன்மையற்ற இந்த கொடு மைக்கு நேரடியாக ஆளாக்கப்பட்டவர் தோழர் எம்.பி.கண்ணுசாமி. இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட களம் அமை த்து போராடி வெற்றி கண்டவர்களில் ஒருவர்தான் தோழர் எம்.பி.கண்ணுசாமி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே உள்ள பெரிய சிங்களாந்தி யில் கொடுங்கோல் ஆட்சி முறையில் கொடிகட்டிப் பறந்த ஒரு பண்ணையில் கண்ணுசாமியின் தகப்பனார் வேலை பார்த்து வந்தார். இப்பண்ணையில் வேலை செய்பவர்  தனது குழந்தைகளை படிக்க வைத்தால் அவருக்கு தண்டனை உண்டு. இதற்கு பயந்து கண்ணுசாமியை அவரது தகப்பனார் ஏழாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டு பண்ணை வேலைக்கு  அனுப்பினார். அங்கு நடைபெற்ற பண்ணைக் கொடு மைகளை கண்டு அதற்கு எதிராக தனது போராட்டத்தை துவக்க ஆரம்பித்தார் கண்ணுசாமி. விடுதலை போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல்பட்டார். நிலச்சுவான்தார்கள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள். அவர்கள் பண்ணைகளில் விவசாயிகள் மீதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் நடத்தப்படும் கொடுமைகளின் உண்மை நிலையை அறிந்தும் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். 

முற்போக்கு சிந்தனையாளராக இருந்ததால் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தார். தங்கச்சியம்மாள் என்பவரை சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்டார். பின்னா ளில் பி.சீனிவாசராவ், வெங்கடேச சோழகர், அமிர்தலிங்கம் போன்ற தலை வர்களின் நட்புறவு கிடைத்து விவசாய சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். விவசாய சங்கத்தில் இணைந்து பண்ணை அடிமைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான அரணாக விளங்கியதை உணர்ந்துகொண்ட எம்.பி.கண்ணுசாமி ஏராளமானவர்களை சங்கத்தில் இணையச் செய்தார். விவ சாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராடி வந்தார்கள். இதற்கு எதிராக பண்ணையார்கள் விவசாயத் தொழிலாளருக்கு வேலை கொடுக்கக் கூடாது என முடிவு செய்தனர். இதனால் பட்டினிச் சூழ்நிலை வந்தது. கண்ணுசாமி நெடும்பலம் சாமியப்ப முதலியாருக்கு சொந்தமான நெல் குவியலை ஊர் மக்களைத் திரட்டிச் சென்று எடுத்து எல்லோருக்கும் கொடுத்தார். இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் நியாயக்கூலி கேட்டு நடத்திய போராட்டத்தி லும் வழக்கு போடப்பட்டது. கூத்தா நல்லூர், லட்சுமாங்குடி போன்ற பகுதி களில் சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை யை அனுபவிக்க நேரிட்டது. தோழர் கண்ணுசாமி கட்சி வேலை யாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள  பாண்டி எனும் கிராமத்திற்கு செல்லும் போது, எங்கடா எங்க ஊர்ல வந்து கட்சி  சங்கம்னு சொல்லிட்டு வரீங்க என்று பண்ணையார் கல்யாணசுந்தரம் என்பவர் கண்ணுசாமியை கட்டி வைத்து சாட்டையால் அடித்து சாணிப்பால் கொடு த்தனர். இதனால், வெகுண்டெழுந்த தோழர் கண்ணுசாமி அடுத்த நாளே மக்களை திரட்டி கல்யாணசுந்தரத்திற்கு சொந்தமான நெல் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அள்ளிக் கொடு த்தது மட்டுமில்லாமல், அக்கிராமத்து பண்ணையார்களின் 3000 கலம் நெல்லையும் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார். 

அரசுப் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிய பாண்டி விவசாயத் தொழிலாளர் களுக்கு எதிராக சிலர் சென்னை உயர்  நீதிமன்றத்தில் தடை வாங்கினர். இவ்வழக்கில் தொழிலாளர்களுக்கு ஆதர வாக மக்களைத் திரட்டி போராடி சட்டப்  போராட்டமும் நடத்தி  வெற்றி கண்டார்.  சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதி களுக்கு குடிநீர், சாலை, குளம் படிக்கட்டு  வசதிகள் ஓரளவுக்கு கிடைக்க செய்தார் கண்ணுசாமி. இவரின் திறமை கண்டு,  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு கட்சியில் சேர கேட்டுக் கொள்ளப்பட்டார். எனது பாதை செங் கொடிப் பாதைதான் என உறுதியோடு தெரிவித்துவிட்டார்.  திருத்துறைப்பூண்டி பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 10,000-த்திற்கும் மேற்பட்டோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்தார். இந்நிகழ்விற்கு பிறகு திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கட்சியின் வெகுஜனத்தளம் பரவலாக விரிவடைந்தது. எடுத்த முடிவை பின்  வாங்காமல் நெஞ்சுறுதியோடு நிறை வேற்றும் வலிமைமிக்க தலைவராகவும் கட்சியின் தாலுகா செயலாளராகவும்,  நகரசபை உறுப்பினராகவும், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 

17.9.1928ல் பிறந்து தன் வாழ்நாள்  முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின்  உரிமைகளை மீட்டெடுக்க அர்ப்பணித்துக் கொண்ட தோழர் எம்.பி.கே. 1990  ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம்  நாள் காலமானார். அவருடைய இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான உழைப் பாளி மக்கள் கலந்துகொண்டனர். தோழர் பி.சீனிவாசராவ் நினைவிடத்திற்கு அருகில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னாளில் அவரின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் தோழர் ஏ.நல்லசிவன் கலந்து கொண்டு திருவுருவப்படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தி னார். ஆண்டுதோறும் நவம்பர் பத்தாம்  நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி அனு சரிக்கப்பட்டு வருகிறது. நிலபிரபுத்துவக் கொடுமைகளை ஒழித்துக் கட்ட ஏராளமான தோழர்கள் தங்கள் வாழ்வை  தியாகம் செய்திருந்தனர். அவ்வரிசை யில்  நம் நினைவில் என்றும் வாழும் தோழர்  கண்ணுசாமியும் மக்கள் போராளி என்ப தை இன்றும் உணரச் செய்துள்ளார்.

கே.ஜி.ரகுராமன், சிபிஐ(எம்),  மாவட்ட செயற்குழு உறுப்பினர், திருவாரூர்