tamilnadu

img

நவீனமாகும் ஒகேனக்கல் சுற்றுலா மையம்

தருமபுரி,மார்ச் 6-  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ரூ.18 கோடி யில் சுற்றுலா மையத்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.  ஒகேனக்கல் சுற்றுலா மையத்தின் நுழைவு வாயில், பார்வையாளர் மாடம்,  பரிசல் நிறுத்துமிடம், எண்ணை குளியலுக்கான இடங்கள், உடை மாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் நிறுத்துமிடம், பரிசல்  சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக்கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத் தல், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.1,757.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கான 3.10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். சட்ட மன்ற  உறுப்பினர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.