பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக தாக்குதல்களை எதிர்கொண்ட வீரம் செறிந்த போராட்டங்கள் மற்றும் ஆதரவு இயக்கங்களின் அடையாளமாக மாநில செயலாளர் இ.முத்துகுமார் தலைமையில் கொண்டுவரப்பட்ட மாநாட்டுச் செங்கொடியினை சிஐடியு மூத்த தலைவர் எம்.சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த கொடியை சிஐடியு மூத்த தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே ஏற்றி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தலைவர்களும் மாநாட்டு பிரதிநிதிகளும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி (தோழர் கே.வைத்தியநாதன், எஸ்.பஞ்சரத்தினம் நகர்), நவ.4- இந்திய தொழிற்சங்க மையம் - (சிஐடியு)தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக தமிழக உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களின் வழிகாட்டிகள் மற்றும் தியாகிகள் நினைவாக நினை வுச்சுடர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி உணர்வுப்பூர்வமான எழுச்சி முழக்கங்களுடன் நடந்தது.
வெண்மணி தியாகச் சுடரை சிஐடியு மாநில துணை தலை வர் சி.ஜெயபால் தலைமை யிலான குழுவினர் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர். சின்னியம்பாளை யம் தியாகச் சுடரை மாநில துணை தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி குழு வினரிடமிருந்து பி.என்.உண்ணி பெற்றுக்கொண்டார். பொன்மலை தியாகச்சுடரை மாநில செய லாளர் ஏ.ஜானகிராமன் குழுவினரி டமிருந்து மாநில துணைத் தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் பெற்றுக்கொண்டார். திருமெய் ஞானம் தியாகிகள் நினைவுச்சுடரை மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ரவீந்திரன் குழுவினரிடமிருந்து டிஆர்இயு தலைவர்களில் ஒருவ ரான ஆர்.இளங்கோவன் பெற்றுக் கொண்டார். சேலம் சிறைத்தியாகி கள் நினைவுச்சுடரை சிஐடியு துணை தலைவர் டி.உதயகுமார் குழுவினரி டம் இருந்து மாநிலக்குழு உறுப்பி னர் பி.இந்திரா பெற்றுக்கொண்டார்
தோழர் லீலாவதி நினைவுச் சுடரை மாநில துணை தலைவர் எம்.மகாலட்சுமி தலைமையிலான குழுவினரிடம் இருந்து மூத்த தலை வர் எஸ்.கே.தியாகராஜன் பெற்றுக் கொண்டார். தோழர்.பி.ராமமூர்த்தி நினைவுச் சுடரை மாநில துணை தலைவர் ஆர்.தெய்வராஜ் குழு வினரிடமிருந்து வி.பிச்சை பெற்றுக் கொண்டார். தோழர் ஆர்.உமாநாத் நினைவுச்சுடரை மாநில செயலா ளர் எஸ்.ரங்கராஜன் குழுவினரி டமிருந்து எஸ்.நூர்முகமது பெற்றுக் கொண்டார். தோழர் கே.ரமணி நினை வுச்சுடரை ஆர்.ரெங்கராஜ் குழுவினரிடமிருந்து மாநில செயலா ளர் டி.டெய்சி பெற்றுக்கொண்டார். தோழர்.வி.பி.சிந்தன் நினைவுச் சுடரை மாநில செயலாளர் ப.பால கிருஷ்ணன் குழுவினரிடமிருந்து மூத்த தோழர் எஸ்.எஸ்.சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். தோழர் ஏ.நல்லசிவன் நினைவுச்சுடரை மாநில செயலாளர் ஆர்.மோகன் குழுவினர் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் எம்.தனலட்சுமியிடம் வழங்கினர். சி.கோவிந்தராஜன் நினைவுச் சுடரை மாநில செயலாளர் பி.கருப்பையன் குழுவினர் மூத்த தலைவர் ஏ.பி.அன்பழகனிடம் வழங்கினர். தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவுச் சுடரை அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார் தலைமையிலான குழுவினரிடமிருந்து சிஐடியு மாநில துணை தலைவர் ஆர்.சிங்காரவேலு பெற்றுக்கொண்டார்.