சென்னை, அக். 28- சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று தங்க ளின் வாழ்க்கைப் பயணத்தை மகேந்தி ரன் - தீபா ஜோடி தொடங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும், வேலூரை சேர்ந்த 36 வயதான தீபாவும் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தனர். தொடர் சிகிச்சையின் பலனாக மன அழுத்தம் நீங்கி, மன நோயிலிருந்து சிறிது சிறிதாக குணமடைந்தனர். தொடர்ந்து, இருவரும் காப்பகத்தில் உள்ள கேர் செண்டரில் தங்கி மனநல காப்பகத்திலேயே பல்வேறு பணி களில் ஈடுபட்டனர். எம்.பில் வரை படித் துள்ள மகேந்திரன் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கான பயிற்சி மையத் தில் பராமரிப்பாளராக பணியாற்றி வரு கிறார்.
ஆசிரியர் படிப்பு முடித்த தீபாவும் அதே காப்பகம் சார்பில் நடத் தப்படும் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஆரம்பத்தில் தந்தையை இழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்தபோது முதல் பார்வையிலேயே மகேந்திரன் தீபா இடையே காதல் மலர்ந்துள்ளது. முதல் சந்திப்பிலேயே மகேந்திரன் ‘திருமணம் செய்து கொள்ளலாமா’ எனக் கேட்க, சற்றே தயங்கிய தீபா சிறிது காலத்திற்குப் பிறகு அதற்கு சம்மதித்தார். தந்தையின் பிரிவை தாங்க முடியாத சூழலில் மனநோய்க்கு ஆளான தனக்கு மகேந்திரனே தனக்கு மருந்தாக கிடைத்ததாக நெகழ்ச்சி யுடன் தெரிவிக்கறார் தீபா. இந்நிலையில் சிகிச்சையில் இருந்து இருவரும் முழுமையாக குணமடைந்த பிறகு வெள்ளியன்று (அக். 28) அவர்க ளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திரு மணம் நடைபெற்றது. இந்த திருமணத் திற்கு இருவீட்டார் தரப்பிலும் இருந்து வந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த பிறகு புதுமண தம்பதி மகேந்திரன், தீபா பேசுகை யில், நாங்கள் எதிர்பார்க்காத விஷ யங்கள் எல்லாம் நடக்கிறது. எங்கள் வீட்டில் திருமணம் நடத்தி வைத்தி ருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இருந்திருக்குமா என்று தெரியாது. மருத்துவமனை தலைமை மருத்துவர் பூர்ண சந்திரிக்காவுக்கு எங்கள் நன்றி கள் என்று தெரிவித்தனர்.