சேலம், பிப்.11- ஆத்தூரில், விவசாயிகள் நலனற்ற ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்க தலை வர்களை இழிவாகவும், ஏளனமாகவும் பேசிய காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சமர்ப் பிக்கப்பட்ட பட்ஜெட்டில் விவசாயிகள் நல னுக்கான எந்த அறிவிப்பும் இல்லாததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங் கம் இணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒன் றிய அரசின் பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் ஒரு பகு தியாக சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழி லாளர் சங்கத்தின் நிர்வாகிகள் வெங்கடா சலம், மாரிமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் பெ.சண் முகம், மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காவல்துறை வன்முறை
அப்போது, விவசாயிகள் போராட் டத்தை இழிவுபடுத்தும் வகையில் போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்களை ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் என்ப வர் ஒருமையில் பேசியதோடு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்கும் விதத்தில் பேசியுள்ளார். இதையடுத்து, காவல் அதிகாரியின் செயல் ஒன்றிய அர சுக்கு ஆதரவாக உள்ளதென விவசாயி கள் கடுமையாக எச்சரித்தனர். மேலும், வயது முதிர்ந்த விவசாயிகள் என கூட பார்க்காமல் தரதரவென இழுத்துச்சென்று கைது செய்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவசாயிகள் சங்கம் கண்டனம்
விவசாயிகளின் இந்த போராட்டம் தமிழ் நாடு முழுவதும் நடைபெற்றுள்ள நிலை யில், ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியது கண்டனத்திற்குரியது. மேலும், இதே காவல் அதிகாரி தொடர்ச்சி யாக அனைத்து தரப்பினரிடம் ஒருமையில் பேசுவது, அடாவடித்தனமாக நடந்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற வழக்கறிஞர் போராட்டம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நடத்திய போராட்டத்திலும், அவர் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் மக்கள் நலனுக்காக போராடும் ஜனநாயக ரீதியில் போராடும் செயல்களுக்காக போராட்டத்தில் ஈடுபடு பவர்களை ஒருமையில் பேசுவது அநாகரி கமாக நடத்துவது என தொடர்ந்து அவரின் நடவடிக்கை இருந்து வருகிறது. அவர் காவல்துறை பணிக்கு தகுதி இல் லாத நபராக இருக்கிறார். மேலும், தனிப் பட்ட அரசியல் கட்சியின் ஏஜெண்டாக இருப் பாரோ? என்ற சந்தேகம் எழுகிறது. அவர் உட னடியாக இந்த போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஆத்தூர் காவல் அதி காரி மீது உயரதிகாரிகள் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்படும், என பெ.சண்முகம் தெரி வித்தார்.