tamilnadu

img

பறவைகள் உண்டு களிக்க தானிய வயல் அரசுப்பள்ளி மாணவர்களின் அபார முயற்சி

கோவை, மார்ச் 3- புரட்சி கவிஞர் பாரதியின் கவிதை களை பின்பற்றி பறவைகளுக்கு சிறு தானியங்களை விவசாயம் செய்து  அசத்தும் பள்ளி மாணவ மாணவிகளின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  பொள்ளாச்சி அருகே உள்ள பெத்த நாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளி யில் இருபாலரை சேர்ந்த 165 மாண வர்கள் பயின்று வருகின்றனர். இப்பள் ளியில், தமிழ்நாட்டின் பாரம்பரியம், கிரா மப்புற விளையாட்டுகள் குறித்து ஆசிரி யர்கள் தனி கவனம் எடுத்து கற்றுத்தரு கின்றனர். இதன் எதிரொலியாக பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவிகள் 110 நாட்டு மரங்கள் நடப்பட்டு பராமரித்து வருகின்றனர். மேலும், கிராமப்புறங்க ளில் நாட்டு மரங்கள் அழியா வண்ணம் இருக்க விதை பந்துகள் தூவி வருகின்ற னர், தற்பொழுது கோடை காலம் தொடங் கியுள்ளதால் பறவைகளுக்கு சிறுதானி யங்கள் விவசாயம் செய்து அசத்தி வரு கின்றனர். இதுகுறித்து, மாணவர்கள் கூறுகையில், பள்ளியில்  தலைமை ஆசி ரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் ஆகியோர் கோடை காலத்தில், பறவைகள் உண வுக்கு ஏங்குவது குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தினர். மேலும், நாங்கள் மதிய உணவு அருந்தும் பொழுது கீழே விழும் உணவுகளை பறவைகள் தினமும் வந்து சாப்பிட்டு செல்கிறது. இதனையடுத்து, எங்கள் பள்ளி வளாகத்தில் சிறு தானியம் விவசாயம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தை  வெளிப்படுத்தினோம். இதனை எங்கள் ஆசிரியர்களும் வரவேற்று மைதானத் தின் ஒருபகுதி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தனர். நாங்கள் இந்த நிலத்தில், ராகி, கம்பு, சோளம் மற்றும் சிறுதானி யங்கள் விவசாயம் செய்து வருகிறோம். கோடைகாலத்தில் பறவைகள் இங்கு  வந்து சிறுதானியங்களை உண்டு களிக் கும். கிராமப்புறங்களில் செல்போன் டவர் அதிக அளவில் உள்ளதால் பறவை இனங்கள் அழிந்துவிட்டது, ஆதலால் பறவைகளை பாதுகாக்க வும், இந்த சிறுதானிய விவசாயம் செய்து வருகிறோம், என்றனர்.