சிவகங்கை, மார்ச் 15- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் கள்ளச்சாரா யக் கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் டாஸ்மாக் விற்பனையாளர் அர்ஜூன் கொல்லப்பட்டார். பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை (எண் 7721) உள்ளது. கடந்த பிப்ரவரி 10 அன்று பெட்ரோல் குண்டு வீசி யதில் டாஸ்மாக் கடை பலத்த சேத மடைந்தது. இதற்கு காரணமான வர்கள் யாரும் கைது செய்யப்பட வில்லை. இச்சம்பவத்திற்கு கள்ளச்சா ராயக் கும்பல்தான் காரணம் என டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கப் பட்டது. சிவகங்கை அரண்மனை வாச லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளத்தூரில் அரசு மதுபானக் கடை வந்தவுடன் கள்ளச்சாராய விற்பனை பாதிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி கடையை பூட்டச்செய்துவிடலாம் என்கிற நோக்கத்தோடு கள்ளச்சாராய கும்பல் கடையின் மீது பெட்ரோல் குண்டு களை வீசியது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 3 அன்று இரவு 9.50 மணியளவில் கள்ளச் சாராயக்கும்பல் மீண்டும் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய தில் விற்பனையாளர் அர்ஜூன் பலத்த க்காயம் அடைந்தார். இவர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மார்ச் 15 அன்று அர்ஜூன் உயிரிழந்தார். டாஸ்மாக் ஊழியர் அர்ஜூனைக் கொன்ற கள்ளச்சாராயக்கும்பலைக் கண்டித்தும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்ச் 15 புதனன்று சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. அர்ஜூன் குடும்பத் திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். குடும்ப வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தினர் தமிழக அரசை வலி யுறுத்தியுள்ளனர்.