tamilnadu

img

உயர்கல்வித்துறையில் காலத்துக்கு ஏற்ற முழுமையான சீர்திருத்தம்: கேரள முதல்வர்

கோழிக்கோடு, மார்ச் 6- தொழில் துறையுடன் இணைந்து உயர் கல்வித்துறையில் காலத்திற்கேற்ற மாற்றங் கள் செயல்படுத்தப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கோழிக்கோடில் உள்ள எரஞ்சிப் பாலத்தில் மர்கஸ் இன்டர்நேஷனல் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து அவர் மேலும் கூறியதாவது:  தொழில் துறையில் வேலை வாய்ப்புகள் கண்டறியப்பட்டு, கேரள உயர்கல்வித் துறை யில் அதற்கான படிப்புகள் செயல்படுத்தப் படும். சமுதாயத்தை அறிவு சமுதாயமாக மாற்றுவதே அரசின் நோக்கம். உயர்கல்வி துறையில் மாற்றங்கள் முக்கியமாக தேவை. இம்முயற்சியின் பயனாக  அதற்குரிய படிப்புகளை தொடங்க முடியும். உயர்கல்வித் துறையில் உள்ள சில நிறுவனங்கள் உலகத் தரத்திற்கு மேம் படுத்தப்படும். உயர்கல்வி நிறுவனங்களுக் கான முயற்சிகள் அரசு, தனியார், கூட்டு மற்றும் கூட்டுறவு முறைகள் மூலம் கல்வி நிறு வனங்களுக்கு தேவையான முன்முயற்சி கள் மேற்கொள்ளப்படும். சமூக முன்னே ற்றத்திற்கு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக, சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பொதுக் கல்வித் துறையில் கேரளம் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவிற்கு காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலைமை தாங்கினார்.