tamilnadu

img

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: கி.வீரமணி

சென்னை, நவ. 15- ஒன்றிய அரசு சாதிவாரி கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார். பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை  எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில்  செவ்வாயன்று (நவ.15) சென்னை யில் அனைத்துக் கட்சி, சமூக அமைப்பு களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு திக தலை வர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக அரசுடன் இணைந்து, அனைத்து அமைப்புக ளும் மறுசீராய்வு மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,  இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து  மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும்  என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டுள்ளது” என்றார். காங்கிரஸ், சிபிஎம் நிலைபாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜன நாயகம், மதச்சார்பின்மை காப்பாற்றப் பட வேண்டும் என்ற பொதுக்கொள் கையின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படுவோம். கருத்து மாறுபாடு இருப்பினும், அது எங்களை ஒரு போதும் பிரிக்காது” என்றார். இந்தக் கூட்டத்தில் கலி.பூங்குன்றன்  (திக), டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), இரா.முத்தரசன், மு.வீர பாண்டியன் (சிபிஐ), தொல்.திருமாவள வன், வன்னியரசு (விசிக), கே.எம்.காதர்மொகைதீன் (ஐயுஎம்எல்), ஆ.வந்தியதேவன் (மதிமுக), அப்துல்ச மது (மமக), சுப.வீரபாண்டியன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) உள்ளிட்டு 15 அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.