tamilnadu

img

பெண் கல்வியின் கலங்கரை விளக்கம் ராணிமேரி கல்லூரி : முதலமைச்சர் புகழாரம்

சென்னை,நவ.22- சென்னை ராணிமேரி கல்லூரி,  பெண் கல்விக்கு கலங்கரை விளக்காக திகழ்கிறது என்று முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். சென்னை ராணிமேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா செவ்வா யன்று (நவ.22) நடைபெற்றது. இதில் 2,702 மாணவிகள் இளங்கலை  பட்டமும், 473 மாணவிகள் முதுநிலை  பட்டமும், 84 மாணவிகள் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (எம்.பில்) என மொத்தம் 3,259 பேர் பட்டம் பெற்றனர். இதில் 5 மாற்றுத்திறனாளி மாணவியர் உட்பட 104 மாணவியர் சிறப்புத் தகுதி பெற்று பதக்கமும், பட்டயமும் பெற்றனர். இந்த விழாவில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தியா வில் முதன்முதலில் தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரியும் இதுதான். பெண்கல்விக்கான கலங்கரை விளக்கமாக இந்த கல்லூரி விளங்கிக் கொண்டிருக்கிறது”என்றார். பழம்பெருமைகளைக் கொண்டி ருக்கக் கூடிய இந்த கல்லூரியை இடிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டது. முன்னாள் முதல்வராக இருந்த ெஜயலலிதா அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அன்றைக்கு இந்த கல்லூரியை இடிக்கக்கூடாது என்று, சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம் என்றும் அவர் கூறினார். ராணிமேரி கல்லூரியில் போராட்டத் தில் ஈடுபட்டு வந்த மாணவிகளை சுவர்  ஏறி குதித்து சந்தித்ததாக வழக்கு பதிந்து எங்களையெல்லாம் கைது செய்து கடலூரில் சிறையில் அடைத்த னர். ஒருமாத காலம் சிறையில் இருந்தோம். அதை துன்பமாக இல்லை,  மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம் என்று அவர் தெரிவித்தார்.