tamilnadu

img

கர்நாடக அரசின் உடன்பாடு எதிரொலி சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் சரணடைந்தனர்

காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருக்கும் சித்தராமையா, “தாக்குதல் நடத்தா மல் நக்சல்கள் சரண டைந்தால் மறு வாழ்வுக்கு உதவி செய்வோம்” என அறிவித்து, மாநில அரசு சார்பில் முற் போக்கு சிந்தனையா ளர்கள், முன்னாள் நக்சல் குழுவினர் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிக்குள் சென்று 6 நக்சல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் 6 நக்சல்களும் புதனன்று இரவு முதல்வர் சித்தராமையா முன்னிலை யில் சரணடைந்தனர். கர்நாடக அரசின் நடைமுறையை சத்தீஸ்கர் உள்ளிட்ட நக்சல்கள் நடமாட்டம் உள்ள மாநிலங் கள் பின்பற்ற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தன.  இந்நிலையில், பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கண்காணிப்பாளர் கிரண் முன்னிலை யில் 2 பெண்கள் உட்பட 9 நக்சல்கள் சனிக்கிழமை அன்று சரணடைந்துள்ள னர். 2 நக்சல்களுக்கு ரூ. 8 லட்சமும், 4 நக்சல்களுக்கு ரூ.5 லட்சமும் சன்மா னம் வழங்கப்பட்டுள்ளன. அதாவது சரணடைந்தவர்கள் அனைவருக்கும் மொத்தமாக ரூ.43 லட்சம் வழங்கப் பட்டுள்ளது.