tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதி அங்காடி ஆய்வு

பெரம்பலூர், மே 6 -  பெரம்பலூர் வட்டத் திற்குட்பட்ட சிறுவாச்சூர் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக் குழுக் களின் உற்பத்திப் பொருட் கள் விற்பனை செய்தி டும் பொருட்டு மதுரகாளி யம்மன் கோவில் அருகில்  ரூ.10 லட்சத்தில் “மதி அங்காடி” கட்டப்பட்டு வருகிறது. இதை மாவட்ட ஆட்சியர் கிரேஸ்  பச்சாவ் செவ்வாய்க் கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

740 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூர், மே 6- தஞ்சாவூரில் உள்ள  மாவு அரைப்பகத்தி லிருந்து 740 கிலோ  ரேசன் அரிசி திங்கள் கிழமை பறிமுதல் செய்யப் பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் சுப.கமலக் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் வெண் ணிலா, வருவாய் ஆய்வா ளர் வெங்கட்ராமன் ஆகி யோர் அடங்கிய குழு வினர் தஞ்சாவூர் பர்மா காலனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு சோதனையில் திங்கள்கிழமை மாலை  ஈடுபட்டனர். அப்போது, ஆர்.எம்.எஸ். காலனியி லுள்ள மாவு அரைப்பகத் தில் 16 மூட்டைகளில் இருந்த 740 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொ டர்ந்து, அலுவலர்கள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

திருவாரூரில் ஜமாபந்தி

திருவாரூர், மே 6 - திருவாரூர் மாவட்டம்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை சார்பில், திருவாரூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஜமாபந்தி எனப்படும் 1434 பசலி  ஆண்டு வருவாய் தீர்வா யம்   நடைபெற்றது. வருவாய் தீர்வாயத் திற்கு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் அலுவல ரும், வருவாய் தீர்வாய அலுவலருமான சங்கர் தலைமை வகித்தார். இதில் வட்டாட்சியர்கள், சரக வருவாய் ஆய்வா ளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பிற  துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்ட னர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் திருவா ரூர் வட்டம் திருக்கண்ண மங்கை உள்வட்டத்தில் உள்ள 20 கிராமங்களான நெய்குப்பை, செம்மங் குடி, தீபங்குடி, கீரங்குடி,  மணக்கால், அரசவ ணங்காடு, எண்கண், காப்பணாமங்கலம், வட கண்டம், அம்மையப்பன், காட்டூர்  உள்ளிட்ட கிரா மங்களில் இருந்து வந்த மக்களிடம், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய  70-க்கும்  மேற்பட்ட மனுக் கள் பெறப்பட்டு தீர்வுக்கு பரிசீலிக்கப்பட்டது. தீர்வு காணப்பட்ட பய னாளிக்கு உடனடியாக ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து மே 8 ஆம்  தேதி வரை 68 கிராமங் களுக்கு வருவாய் தீர்வா யம் நடைபெற உள்ளது.