ஆட்டோவில் பயணி தவறவிட்ட 7 சவரன் நகை ஒப்படைப்பு
சென்னை, ஜூன் 9- ஆட்டோவில் பயணி தவறிட்ட 7 சவரன் நகையை ஆட்டோ டிரைவர் நேர்மையுடன் ஒப்படைத்ததால் காவலர்கள் அதை உரியவர்களிடம் வழங்கினர். சென்னை, அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியில் வசிக்கும் சக்திவேல் (53) என்பவர் குடும்பத்துடன் அவரது சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் சென்றுவிட்டு இரவு பேருந்தில் சென்னைக்கு வந்து, சாலிகிராமம் அருகே 100 அடி சாலையில் இறங்கி 3 பைகளுடன் அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி எம்எம்டிஏ காலனியிலுள்ள அவரது வீட்டினருகே இறங்கி, வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 2 பைகள் மட்டும் ஆட்டோவிலிருந்து எடுத்து வந்ததும், 7 சவரன் தங்கநகைகள் அடங்கிய ஒரு பையை ஆட்டோவில் மறந்துவிட்டதும் தெரியவந்தது. உடனே, சக்திவேல் சாலிகிராமம் உள்ளிட்ட பல இடங்களில் தேடி ஆட்டோ ஓட்டுநர் விவரம் கிடைக்காத நிலையில், இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை பெற்று காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அமைந்தகரை, வ.உ.சி. தெருவில் வசித்து வரும் ஆரோக்கியதாஸ் (54) என்ற ஆட்டோ ஓட்டுநர் அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று , தனது ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்க நகைகள் அடங்கிய பையை ஒப்படைத்து விவரங்கள் கூறினார். காவல் குழுவினர் விசாரணை செய்ததில், புகார்தாரர் சக்திவேல் ஆட்டோவில் மறந்துவிட்ட தங்க நகைகள் அடங்கிய பை ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் ஒப்படைத்தது என உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் 7 சவரன் தங்க நகைகள் அடங்கிய பை, ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் மூலம் சக்திவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்க நகைகள் அடங்கிய பையை பெற்றுக் கொண்ட சக்திவேல், ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் மற்றும் அரும்பாக்கம் காவல் குழுவினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
போரூரில் ரூ.258 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 9- சென்னை போரூரில் ரூ.258 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறினர். சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து, கோவளம் அருகில் ரூ.471 கோடியில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான பணி களிலும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், சென்னை அடுத்த போரூரில் ரூ.258 கோடி மதிப்பில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. 11 ஆயிரத்து 486 சதுர மீட்டர் பரப்பளவில் 15 மில்லியன் லிட்டர் கொள்ளளவு சேமிப்பு திறன் கொண்ட வகையில் இந்த நீர்தேக்கம் இருக்கும். சென்னை, மணலி, மாதவரம் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். இந்த நீர்தேக்கத்திற்கு ஜப்பான் சர்வ தேச ஒத்துழைப்பு நிறுவனம் நிதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.51.99 கோடி நிதி அளிக்கிறது. 18 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் தாம்பரம் மாந கராட்சியின் கீழ் உள்ள 20 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வசிப்பவர்க ளுக்கு குடிநீர் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதல் படியைக் குறிக்கும் வகையில் முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பம்பிங் நிலையங்கள் மற்றும் குளோரின் கட்டு மானங்கள், எந்திரம் மற்றும் ஏற்கெனவே உள்ள நீர் விநியோக குழாய் இணைப்புகள் போன்ற பல முக்கிய கட்டங்களை இந்த திட்டம் உள்ளடக்கியது.
கந்துவட்டி கேட்டு முதியவரை தாக்கிய ரவுடி கைது
சென்னை, ஜூன் 9- சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார். புளியந்தோப்பை சேர்ந்தவர் ஷாஜகான் (70). இவர் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவரிடம் கடந்தாண்டு ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனுக்கான வட்டியாக வாரந்தோறும் ரூ.8 ஆயிரம் வட்டி கொடுத்து வந்தார். ஷாஜஹான் அசலையும், வட்டி யையும் ஒரே நேரத்தில் கொடுத்து கடனை அடைக்க முயன்றுள்ளார். ஆனால் புஷ்பா தரப்பு அந்த பணத்தை வாங்காமல், வாரந்தோறும் ரூ.8 ஆயிரம் கந்துவட்டி கேட்டு தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படு கிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஷாஜஹான், வட்டியை கொடுக்க முடி யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஷாஜ ஹானிடம் வட்டியை கேட்டு புஷ்பாவின் மகன் ராகுல் ஞாயிறன்று தகராறு செய்துள்ளார். மேலும் ராகுல், ஷாஜ ஹானை கடுமையாக தாக்கியதில் தலை பகுதியில் பலத்த காயமடைந்த ஷாஜ ஹான், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பேசின்பாலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ராகுலை திங்கட்கிழமை கைது செய்தனர்.