tamilnadu

7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி! என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் 21 ஆவது நாளாக போராட்டம்

7 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி! என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் 21 ஆவது நாளாக போராட்டம்

தூத்துக்குடி, மே 7 -  தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்  நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த  ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21 ஆவது  நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனல் மின் நிலையம் முன்பு புதனன்று ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான என்எல்சி  தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தில் இரண்டு அலகுகள் மூலம் சுமார் ஆயிரம்  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படு கிறது. இங்கு சுமார் 1350-க்கும் மேற்பட்ட ஆண்-பெண் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நெய்வேலி என்எல்சி யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க  வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 4 ஆம் தேதி உத்தரவு பிறப்பித் தது.  இதைத் தொடர்ந்து என்டிபிஎல் நிர்வா கம் தங்களுக்கு நீதிமன்ற உத்தரவை அமல் படுத்தி ஊதிய உயர்வை வழங்க வேண்டும்  என வலியுறுத்தி, கடந்த ஏப்.17 ஆம் தேதி  முதல் என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்டிபிஎல் நிர்வாகம், என்எல்சி  நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் தலைமையில் நடை பெற்ற 7 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி யடைந்ததை தொடர்ந்து தங்களது கோரிக் கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  புதன்கிழமை 21 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  என்டிபிஎல் ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கும்  மேற்பட்டோர், அனல் மின் நிலையம் முன்பு  தங்கள் மேல் சட்டைகளை கலைந்து அரை  நிர்வாண போராட்டம் மற்றும் நெற்றியில் பட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இப்போராட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல தலைவர் எஸ். அப்பாதுரை தலைமை வகித்தார். மாவட்டத்  தலைவர் பேச்சிமுத்து, என்டிபிஎல் ஒப்பந்த  தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மணி கண்டன், குணா, தமிழ்ச்செல்வன், ராம்குமார்,  கிருஷ்ணன், முருகன், தொமுச சார்பில் என்டி பிஎல் சங்க நிர்வாகிகள் முத்துராஜ் சுந்தர், முத்துசாமி, சுடலைமுத்து, சங்கர், இமான், சாமிக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். என்டிபிஎல் நிர்வாகம், என்எல்சி நிர்வா கம் மற்றும் தமிழக அரசு தொழிலாளர் துறை  தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழி யர்கள், தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். தொழிலாளர்களின் போராட்டம் காரண மாக சுமார் 750 மெகாவாட் மின்சார உற்பத்தி  பாதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வருகை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக  நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து அவரது கோரிக்கைகளை கேட்ட றிந்தார்.