சென்னை,நவ.11- நளினி, முருகன் உட்பட 6 பேரை விடு தலை செய்து உச்சநீதிமன்றம் அளித்து ள்ள தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் மீது 2021 மே மாதம் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தொட ரப்பட்ட வழக்கில் நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்தி ரன் ஆகியோரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த இவர்களை பொதுமன்னிப்பு வழங்கி விடு தலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பிற கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தன. தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளு நருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அரசியல் சாசனப்பிரிவு 161 இன் கீழ் இவர்களை விடு தலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தும், ஆளுநரும், ஒன்றிய அரசும் உள்நோக்கத்துடன் முடி வெடுக்காமல் கிடப்பில் போட்டு வந்தனர். பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னராவது ஆளுநர், மீதமுள்ள 6 பேரையும் விடு தலை செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆளுநர் இதை நிறை வேற்றவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது மீத முள்ளவர்கள் தங்களையும் விடுவிக்க வேண்டுமென்று தொடர்ந்த வழக்கில், ஆளுநர்கள் தொடர்ந்து காலம் தாழ்த்தி யதை சுட்டிக்காட்டியும், அவர்களின் நன்னடத்தை சிறையில் கல்வி கற்றது, பரோல் நடைமுறைகளை முறையாக கடைப்பிடித்தது ஆகியவற்றை குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் இவர்களை விடுதலை செய்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் அவரோடு சேர்ந்து சிலரும் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனைக்குரிய நிகழ்வாகும். இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்கள் நீண்ட காலம் சிறை தண்ட னை அனுபவித்த பின்னணியில் அவர் களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடு தலை செய்ய வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பொது மன்னிப்பு வழங்குவது அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். இத்தகைய மனிதாபிமான நடைமுறையினை ஒன்றிய பாஜக அரசும், அவர்களின் வழிகாட்டு தலின் கீழ் செயல்படும் ஆளுநரும் உள்நோக்கத்துடன் கிடப்பில் போட்டது மட்டுமின்றி, மாநில அரசின் சிபாரிசுகளை யும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியது மாநில அரசுகளின் உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும். இந்நிலையில் உச்சநீதி மன்றம் மாநில அரசின் உரிமைகளை உறுதிப்படுத்தியதுடன், ஆளுநரின் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுக்கும் சரியான பாடம் புகட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
142-ஆவது பிரிவை மீண்டும் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, நவ. 11 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு களாக தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் அதிரடி யாக விடுதலை செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு வழங்கும் பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி- இதே வழக்கில் தொடர்புடைய- பேரறி வாளனை கடந்த மே 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. தற்போது நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோரையும் அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பு தூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு அது ஆயுள் தண்டனை யாக குறைக்கப்பட்டது.
சட்டமன்றத்தில் தீர்மானம்
இதனிடையே, இந்த 7 பேரும் சிறையிலேயே 31 ஆண்டுகளைக் கழித்து விட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையை முன்வைத்தன. அதன்படி தமிழ்நாடு சட்டமன்றமும் 7 பேரின் விடுதலைக்காக தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அந்த தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டதால், இவர்களின் விடுதலை தாமதமாகி வந்தது. ஆளுநரின் தாமதம் குறித்து, பேரறிவாளன் தனியாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஏ.எஸ். போபண்ணா மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுப்ப தில் தாமதம் செய்துவரும் நிலை யில், அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு தங்களுக்கு (உச்ச நீதிமன்றத்திற்கு) வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக அறி வித்தது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு மே 18-ஆம் தேதி பேரறிவாளன் விடுதலையானார். இதனிடையே பேரறிவாளனைப் போலவே தங்களையும் அரசிய லமைப்பு சட்டப்பிரிவு 142-இன் கீழ் விடுதலை செய்யக்கோரி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 26 அன்று உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்த னர்.
அவர்களின் மனுவை, நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.வி. நாகரத்னா அமர்வு விசாரித்தது. நளினி, ரவிச் சந்திரன் ஆகியோரது முறையீடு தொடர்பாக ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி தமிழக அரசு கடந்த வியாழக்கிழமையன்று இரு தனித்தனி பிரமாணப் பத்திரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆர்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை குறைக்கும் வகை யில், 2018-இல் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோச னைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் ஆவார். அந்தப் பரிந்துரை இறுதி யாக ஜனவரி 27, 2021-இல்தான் குடி யரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. அதன் மீது கடந்த ஒரு ஆண்டு மற்றும் ஒன்பது மாதங் களாக இன்னும் முடிவு செய்யப்பட வில்லை” என்று தெரிவித்தது. “சிறையில் இருந்த ரவிச்சந்தி ரனுக்கு தமிழக அரசு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளது. இதனால் அவர் தற்போது அவரது உறவினர் வீட்டில் உள்ளார். அதேபோல நளினிக்கும் கடந்த 27.12.2021 முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளு நர் காலம் தாழ்த்தியதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டார். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும்” என்றும் தெரிவித்தது. இதனிடையே நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுவில் தங்களையும் இடை யீட்டு மனுதாரர்களாக இணைக்க வேண்டுமென- இதே வழக்கில் தொடர்புடைய ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகியோரும் வியாழ னன்று மனுக்களைத் தாக்கல் செய்தனர். பேரறி வாளனை விடுதலை செய்தது போல, தங்களை யும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் வலியுறுத்தினர்.
சட்டப்பிரிவு 142ன் கீழ்...
இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.வி. நாகரத்னா அமர்வு முன்பு இவ்வழக்கு வெள்ளிக்கிழமையன்று வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் சட்டப்பிரிவு 142-இன் கீழ் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. “பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படை யில்- நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏனைய 6 பேருக்கும் பொருந்தும்” என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நீதிமன்றம் கூடியதும், ஒன்றிய அரசின் வழக்கறிஞர்கள் எங்கே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்த வழக்கில் ஒன்றிய அரசின் கருத்தைக் கேட்க வேண்டிய தில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்றும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள் அனை வரும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்களின் நன்னடத்தை விவகாரங்களையும் சுட்டிக்காட்டினர். பேரறிவாளன் வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத்தான் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விவ காரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து பேரறி வாளன் போலவே நிவாரணம் பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அனை வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் ராஜீவ் காந்தி வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற 7 பேருமே, 31 ஆண்டு சிறை வாசத்திற்குப் பின் விடுதலை ஆகியுள்ளனர்.