கமல்ஹாசன் உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்
மாநிலங்களவை தேர்தல்
சென்னை, ஜூன் 9- தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், பேரவைச் செயலகம் இணைச் செயலாளர் கே. ரமேஷ் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர். தமிழக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், 2 அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன்படி, திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் கடந்த 9-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக, கடந்த 2-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளன்றே பத்மராஜன் உள்ளிட்ட 2 சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர். மேலும் 4 பேர் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளனர். தற்போது வரை 6 இடங்களுக்கு 13 நபர்கள் 17 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். திங்கட்கிழமையுடன் (ஜூன் 9) மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 12 மாலை வரை மனுக்களைத் திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெறும். வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்பதால், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதும், அத்துடன், திமுக, அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகியுள்ளது.
கல்வி நிதி மனு; அவசரமாக விசாரிக்க முறையீடு
சென்னை: ஒன்றிய அரசு கல்வி நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ. 2,151 கோடி நிதியை, 6 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ. 2,291 கோடி வழங்க வேண்டும் என்றும், கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு நிதி வழங்காததால் 48 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆலோசனை
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்களுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
தில்லியின் அடிமை
சென்னை: “எப்போதெல்லாம் அமித் ஷாவுக்கும், தில்லிக்கும் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் தில்லியின் கட்டுப்பாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓடோடி வந்து, வீண் அவதூறுகளை பரப்பி அவர்களைக் காப்பாற்றத் துடிக்கிறார், தில்லியின் அடிமை என்பதை எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்” என்று அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்திருக்கிறார்.
‘பாஜக ஆட்சி என்பது கானல் நீர்’
சென்னை: பாஜக காலூன்ற முடியாத வகுப்புவாத எதிர்ப்பு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் அமைய இருக்கும் கூட்டணிக்கு அதிமுக தலைமையேற்க போகிறதா? அல்லது பாஜக தலைமையேற்க போகிறதா? என்பது முடிவு செய்யாத நிலையில் தன்னிச்சையாக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தின் கள நிலவரத்தை முற்றிலும் அறியாமல் பகல் கனவு காண்கிற வகையில் அவர் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிற பாஜகவின் மாய்மால அரசியல் ஒருபோதும் எடுபடாது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி என்பது கானல் நீராக தான் இருக்கப் போகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் ஐக்கியம்
சென்னை: முன்னாள் எம்எல்ஏக்கள் அதிமுக-வைச் சேர்ந்த ஸ்ரீதரன் (வால்பாறை), பாஜகவைச் சேர்ந்த ஆர். ராஜலட்சுமி (மயிலாப்பூர்), திமுகவைச் சேர்ந்த டேவிட் செல்வின் (திருவைகுண்டம்), ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ், முன்னாள் நீதிபதி சி. சுபாஷ் ஆகியோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இதில், அருண் ராஜூக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து கொள்ளை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே தெரு வில் 7 வீடுகளில் அடுத்த டுத்து நடந்த கொள்ளை யில் 19 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ. 1.20 லட்சம் ரொக்கம் திருடு போயுள்ளது. இது குறித்து காவல்துறை யினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தவறு எதுவும் நடக்கவில்லை
விழுப்புரம்: செஞ்சி அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி யதில் அதிகமான மாண வர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த விவ காரம் குறித்து தேர்வுத் துறை, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு பள்ளிக் கல்வித்துறை உயர் அதி காரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதில், எந்த தவறும், முறைகேடுகளும் நடக்க வில்லை என்று தேர்வுத் துறை தெரிவித்திருக் கிறது.
காத்திருப்போர் பட்டியலில் ஆய்வாளர்
சென்னை: சென்னை நொளம்பூரில் வீடு புகுந்து பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்ற விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்யாமல் கட்ட பஞ்சாயத்து பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளார்.
மது பாட்டிலில் புழு முட்டைகள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கீழவலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுபான பாட்டில் ஒன்றில் புழு முட்டைகள் இருந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.