திருவனந்தபுரம், ஜுன் 16- நிங்கள் என்னை கம்யூ னிஸ்டாக்கி, அனுபவங்ஙள் பாளிச்சகள், வாழ்வே மாயம், ஒரு பெண்ணின்றெ கதா, அஸ்வமேதம் ஆகிய 5 திரை காவியங்கள் கேரள சினிமா வின் மைல் கல்லாகும். மாற் றத்துக்கு உதவிய இந்த திரைக்காவியங்கள் வெளி யான 50 ஆண்டு நினைவு களைப் போற்றும் தொடக்க விழா ஞாயிறன்று திருவனந்த புரத்தில் நடந்தது. தோப்பில் பாஸி, வய லார், தேவராஜன், சத்யன், சங்கராடி ஆகிய திரை நட்சத் திரங்களுக்கும் படைப்பாளி களுக்கும் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் பல் வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்த திரைக்காவியங்கள் திரை யிடப்பட உள்ளன. பாரத் பவனம் மற்றும் வயலார் ராம வர்மா கலாச்சார அமைப்பு கள் கூட்டாக இந்த நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. திருவனந்தபுரத்தில் நடந்த திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சி மற்றும் தோப்பில் பாஸி நினைவு தின விழாவுக்கு பிரப்பன்கோடு முரளி முன்னிலை வகித்தார். வயலார் ராமவர்மா கலாச் சார மேடையின் தலைவர் கே. சந்திரிகா தலைமை வகித் தார். எஸ்.ஆர்.சக்திதரன், கோபன் சாஸ்த்திரமங்கலம் உள்ளிட்ட பிரமுகர்கள் பங் கேற்றனர்.