tamilnadu

img

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு: தமிழ்நாட்டில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பு

சென்னை, மே 28- ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படு கின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெற்றது. இத்தேர்வை எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம். அதன்படி நடப்பாண்டு 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல்நிலை தேர்வெழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டு தாள்களும் காலை, மதியம் என இரு வேளைகளில் நடைபெற்றது. பொது படிப்புகள் எனப்படும் ஜிஎஸ் தாளுக்கான தேர்வு காலையிலும் சிசேட் தேர்வு மதியமும் நடைபெறுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் காவல் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், முறைகேடுகளை தவிர்ப்பதற்காக தேர்வர்க ளுக்கு பல்வேறு விதமான கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.