tamilnadu

img

அதிமுக ஆட்சியில் ‘அட்சயப் பாத்திரம்’ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி எங்கே?

சென்னை, மார்ச் 30- கடந்த அதிமுக ஆட்சி யில் ‘அட்சய பாத்திரம்’ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதி எங்கே  சென்றது என நிதியமைச்சர்  பி.டி.ஆர். பழனிவேல் தியா கராஜன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.  வேலுமணி பேசும்போது, “பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை  அட்சய பாத்திரம் என்ற  திட்டமாக அதிமுக ஆட்சி யில் அறிமுகப்படுத்தப் பட்டது” என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கே.என்.நேரு, “நீங்கள் கொண்டு வந்தது  காலை உணவுத் திட்டம் அல்ல. தன்னார்வ தொண்டு  நிறுவனத்திடம் உணவு  தயாரிப்பை ஒப்படைத் தீர்கள்”என்றார். இதனைத்தொடர்ந்து பதிலளித்து பேசிய நிதிய மைச்சர் பி.டி.ஆர். பழனி வேல் தியாகராஜன், “ ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்தது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018 முதல் 2019 வரை ரூ.50 லட்சம் பணம்  விருப்ப நிதியாக ஒதுக்கப் பட்டுள்ளது. பின்னர் 2019  ஆம் ஆண்டுக்கு பிறகு திடீரென்று இந்த நிதி  50 லட்சத்திலிருந்து ரூ. 5  கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.  இதுகுறித்து  ஆய்வு செய்ததில், ரூ. 5  கோடியில் ரூ.4 கோடி அட்ச யப் பாத்திரம் திட்டத்துக்கு தனியார் அமைப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சத்தில்லாத  சத்துணவு! அந்த அமைப்பு வழங் கிய உணவு பூண்டு, வெங்காயம் கூட இல்லாத  உணவு. இதுக்கு பெயர்  சத்துணவு. அரசு இடத்தை  வைத்து, அரசு பணத்தை  வைத்து, பள்ளி மாணவர்க ளுக்கு வழங்குவதற்காக பணத்தை எடுத்து கொடுத்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆளுநர் மாளிகையின் கண்ணுக்கு தெரியாத கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார்.

மடைமாற்றம் ஏன்?

மீண்டும் அடுத்த ஆண்டு  ரூ. 5 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. அதில் ஒரு கோடி ரூபாய் தான் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 4 கோடி வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது. பிறகு அத்திட்டமே நின்று போனது.  ஆளுநர் என்ன வேண்டு மானாலும் செய்யலாம் என்ற நினைப்பில் பணத்தை கொடுத்துள்ளனர். இந்த பணம் ஏதோ கட்சி நடத்து வதற்காக செலவு செய்யப் பட்டதா என்ற அச்சம் வரு கிறது என்றும் அவர் குற்றம்  சாட்டினார். அதோடு, இத்திட்டத் திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை  அந்த நிதி ஆண்டின் இறுதி யில் மற்ற கணக்கிற்கு மாற்று வது சரியல்ல என சி.ஏ.ஜி பல முறை எச்சரிக்கை விடுத்தும்  இதுபோல நடந்துள்ளது. ரூ. 5 கோடி எந்த காரணமும்  இல்லாமல், யாருக்கும் சொல்லாமல் மறைமுகமாக  கணக்குக்கு மாற்றப்பட்டுள் ளது. இது ஜனநாயக மரபுக்கு நல்லது இல்லை.  இது நல்ல திட்டமே இல்லை என்றும் நிதியமைச்சர்  கடுமையாக சாடினார். ரூ.500க்கும் ரூ.1000க்கும் மானிய கோரிக்கையில் சட்டப்பேரவையில் நாம்  ஒப்புதல் பெற்று வருகி றோம். ஆனால் ரூ. 5 கோடிக்கு கணக்கே இல்லை. யார் கணக்கிற்கு அது சென்றது. இது அரசியல மைப்புக்கு உட்பட்டது தானா? என்றும் நிதியமைச் சர் கேள்வி எழுப்பினார். நிதியமைச்சரை தொடர்ந்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், “இதற்கெல்லாம் அன்றைய ஆளுநர் பதில் சொல்லியே தீரவேண்டும்” என்றார்.