tamilnadu

img

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு “குழந்தைகளை உளவியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாகும்” ரத்து செய்ய தமுஎகச வலியுறுத்தல்

மதுரை, பிப்.2- ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது உள வியல் ரீதியாக குழந்தைகளை கொடுமைக் குள்ளாக்குவதற்கு ஒப்பாகும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் விமர்சித்துள்ளது. அமைப்பின் மாநிலக்குழுக்கூட்டம் மதுரை சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் நடைபெற்றது. ஞாயிறன்று செய்தியா ளர்களைச் சந்தித்த கௌரவத் தலைவர் ச. தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது உளவி யல் ரீதியாக குழந்தைகளை கொடுமைக்குள் ளாக்குவதற்கு ஒப்பாகும். மேற்கண்ட வகுப்பு களுக்கு நடைபெறும் தேர்வை குழந்தைகள் பதற்றத்துடன் எதிர்கொள்வர். இதில் தோல்வி யடைந்தால் அவர் மனரீதியாக பாதிக்கப்படு வர். அவர்களது பெற்றோரும் பாதிக்கப்படு வர். இடை நிற்றல் அதிகரிக்கும். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகி விடும். சமூக நீதி பேசும் தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் மட்டுமே நடத்தவேண்டுமென்பது தமுஎகசவின் நிலைபாடு. இன்றைக்கு சமஸ்கிருதத்திலும், தமிழிலும் நடத்தப்படும் என அறநிலையத்துறை கூறியுள்ளது. இது தமிழுக்கு கிடைத்த வெற்றி. சமஸ்கிரு தத்திற்கு கிடைத்த தோல்வி. சிந்துசமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நாகரீகம் என நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். சரஸ்வதி நதி இந்திய நிலப்பரப்பில் உருவாகவும் இல்லை. இந்தி யாவில் ஓடவும் இல்லை. ஆரிய நாகரீகத்தை நிறுவுவதற்காக தவறான தகவலை பாஜக பரப்புகிறது. என்றனர். மிருதங்கம் உருவான வரலாறு குறித்து எழுத்தாளர் டி.எம்.கிருஷ்ணா ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் ஒரு இடத்தில், பசு மாட்டுத் தோல், இளங்கன்றுவின் தோலை பதப்படுத்தி மிருதங்கம் உருவாக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கெதிராக சிலர் கூக்குரல் எழுப்பினர். இதனால் விழா நடத்துவதற்கு இடம் வழங்கிய சென்னை கலாஷேத்திர அகாதெமி கடைசியில் மறுத்து விட்டது. தற்போது வேறொரு இடத்தில் விழா நடைபெறுகிறது. குறிப்பாக மிருதங்கத்தை தயாரிப்பது தலித் மக்கள், தலித் கிறிஸ்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எங்குமே கொண்டாடப்படவில்லை. தற்போது கொண்டாடப்படுகிறார்கள். இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது, பிப்ரவரி 21-ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் தமிழ் உரிமை, அதன் பன்முகத்தன்மை, தமிழ் கலாச்சாரத்தை முன்னிறுத்தி கலந்துரை யாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு உள்ளது. தமிழின் மாண்பை தமுஎகச உயர்த்திப் பிடிக்கும்.  இவ்வாறு அவர்கள் கூறினர். கீழடி ஆறாம்கட்ட அகழாய்விற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதே?  நிதி ஒதுக்கப்படாத சூழலில் ஆய்வுக்கு அனுமதி கிடைக்குமா? மத்திய அரசு ஒத்துழைப்பு நல்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆத வன் தீட்சண்யா, மாநிலஅரசில் பல்வேறு துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளது. ஆனால், மத்திய அரசின் பொதுப்பட்டியலில் தமிழகம் உள்ளது. இருப்பினும் கீழடிக்கு நிதி ஒதுக்க வேண்டுமென தொடர்ந்து மத் திய அரசை வலியுறுத்துவோம் என்றார். பேட்டியின் போது மாநில நிர்வாகிகள் கே.வசந்தன், கருணா. பிரகதீஸ்வரன், களப் பிரன், லெட்சுமிகாந்தன் ஆகியோர் உடனி ருந்தனர்.