சென்னை கிண்டி,காந்தி மண்டப வளாகத்தில் அயோத்தி தாசப்பண்டிதருக்கு ரூ.2கோடியே 48லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்குவைக்கப் பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாருக்குமார்பளவு சிலை அமைக்க பீடம் தயார் நிலையில் உள்ளது. இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக முடித்திட அறிவுறுத்தினார்.