tamilnadu

img

தென்சென்னையில் 474 சந்தாக்கள் அளிப்பு

விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா உருவப்படத் திறப்பு மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று (ஜூலை 15) தென்சென்னை மாவட்டத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் தீக்கதிருக்கு 474 சந்தாக்களை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைச்சாமி வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், கே.வனஜகுமாரி, தியாகராயர்நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி, தோழர் என்.சங்கரய்யாவின் மகன் எஸ்.நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.