tamilnadu

img

காவிரியாற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி

கரூர்/புதுக்கோட்டை, பிப்.15- புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர்  பில்லிபட்டி ஊராட்சி அரசு நடுநிலைப்  பள்ளியைச் சேர்ந்த 15 மாணவ, மாண விகள் உடற்கல்வி ஆசிரியர்களுடன்  திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் அருகில் உள்ள ஏழூர்பட்டியில் செயல் படும் கொங்குநாடு பொறியியல் கல்லூ ரியில் குடியரசு தின விளையாட்டுப் போட் டியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பின்பு மாயனூர் காவிரி கதவணையை சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். சுற்றிப் பார்த்த பின்பு கதவணை அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவி லில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காவிரி யாற்றில் இறங்கிக் குளித்துள்ளனர்.  அப்போது மாணவி ஒருவரை தண்ணீர் இழுத்துள்ளது. மற்ற மாணவிகள் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். முயற்சித்தவர்கள் அனைவரும் அடுத்த டுத்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட னர்.  இதில் தமிழரசி, சோபியா, இனியா,  லாவண்யா என நான்கு மாணவிகள் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்த மற்றவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.  தகவலறிந்து  கரூர், முசிறி  தீயணைப்பு மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, படகு மூலம் தண்ணீரில் மூழ்கிய நான்கு மாணவிகளை  நீண்ட  நேர தேடுத லுக்குப் பின் அவர்களை சடலமாகமீட்டனர்.  சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகி யோர் வந்திருந்து மீட்பு நடவடிக்கை களை துரிதப்படுத்தினர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மாயனூர் காவல்துறையினர் மாண விகளின் உடல்களை உடற்கூராய்விற் காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். 

பெற்றோர்களின் அனுமதி இல்லா மலும், அவர்களது கையெழுத்து இல்லா மலும் கரூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நடை பெற்றதற்கு உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள்-உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உயிரிழந்த மாணவிகளில் சோபியா 7-ஆம் வகுப்பு, தமிழரசி 8-ஆம் வகுப்பு, இனியா, லாவண்யா ஆகியோர் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். 

சோகத்தில் பிலிப்பட்டி

மாயனூர் காவிரியாற்றில் குளிக்க இறங்கிய நான்கு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் புதுக் கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த நிலை யில் இச்சம்பவத்தில், கவனக்குறைவாக செயல்பட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் கோ.செபசகாயூஎப்ராஹிம், சி.திலகவதி ஆகிய மூன்று பேரையும் இடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஆறுதல்-நிவாரணம்

உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரி வித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  முதலமைச்சர்  பொது நிவாரண நிதியிலிருந்து மாணவிகள் குடும்பத் திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.