tamilnadu

img

விவசாயிகளை பாதுகாக்கக்கோரி 3600 கி.மீ தூரம் மாட்டு வண்டி பயணம்

விருதுநகர், ஜன.28- விவசாயம் மற்றும் விவசாயிகளை பாது காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இளைஞர் ஒருவர் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு வருகிறார். சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த வர் சந்திர சூரியன்(35). பட்டதாரி இளை ஞரான இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் உள்ளார். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தும் வேலைக்கு செல்லாமல் விவசாயத்தின் மீது கொண்ட பற்று காரணமாக தனது  சொந்த ஊரிலேயே கடந்த 10 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், விவசாயத்தையும் விவ சாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜன வரி 1இல் கன்னியாகுமரியிலிருந்து தனது ஒற்றை மாட்டு வண்டியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.  இந்தநிலையில் விருதுநகருக்கு வருகை தந்த சந்திரசூரியன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், இன்றைய தலை முறையினர், விவசாயம் செய்வதைக் கற்று கொண்டு விவசாயம் செய்தால் தான் நம்  நாடும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்  லும். விவசாயிகள் விளைவித்த உணவுப்  பொருள்களுக்கு சரியான விலையை ஒன்றிய அரசும், மாநில அரசும் நிர்ணயம்  செய்திடவேண்டும். நாட்டு இனமாடுகளின் அழிவால் தான், இயற்கை உரங்கள் அடி யோடு அழிந்து விட்டன. இதன் காரணமா கவே, ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி  மருந்துகளும் வந்து நம் மண்ணையும், மண்ணில் வாழ்ந்த நுண்ணுயிரிகளையும் அழித்து பாழாக்கிவிட்டன. எனவே, அழிந்து வரும் நாட்டு இனமாடுகளை பாதுகாக்க அர சாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்  டும் என்று தெரிவித்தார். மேலும், இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி காஷ்மீர் வரை சுமார் 3600 கி.மீ பய ணம் மேற்கொண்டு அங்கு நிறைவு செய்ய  உள்ளதாகவும் தெரிவித்தார்.