மதுரை, ஜூலை 11- மதுரை மாவட்டம் பேரையூரில் கடந்த 25 நாட்களில் 35 பேருக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இறந்தவர்களின் மரணத்திற்கு காரணம் கண்டறியப்பட வில்லை. இதனால் மக்களிடம் கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது. அரசு தரப்பிலி ருந்து கொரோனா சோதனை செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. பேரையூரில் வழக்கத்திற்கு மாறாக நிகழ்ந்துள்ள மரணங்களை கவனித்து கொரோனா பரவலை தடுக்க அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஜூலை 7-ஆம் தேதி மட்டும் பேரையூர் பள்ளிவாசல் தெரு சந்தனக்கடை ராஜா, அம்சத், கொத்தமல்லி, ஆதிதிரா விடர் தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி, ஜவ ஹர் தெரு மாரிமுத்து, பெருமாள்கோவில் தெரு முன்னாள் பேரூராட்சித் தலைவர் காளிராஜ், பள்ளிவாசல் தெரு சம்சுதீன், வ.உ.சி. தெரு மாரிமுத்து உயிரிழந்துள்ளனர்.
ஜூலை 9-ஆம் தேதி வ.உ.சி.தெரு ஆறு முகம், ஜவஹர் தெரு செல்வராஜ் ஆகி யோரும் ஜூலை 10-ஆம் தேதி ஹைஸ்கூல் பின்புறம் வசிக்கும முனியாண்டி, அப்பாஸ் நகர் அ.ப.சுப்பிரமணியன் அவர்களின் மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தவிர ஜூன் 20-ஆம் தேதி ஆதிதிராவிடர் தெரு முருகேசன், பரமசிவம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில் 25 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளனர். உயிரிழப்பிற்கான காரணங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு, கொரோனா பரிசோதனையும் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியர், பேரையூர் வட்டாட் சியர், பேரையூர் பேரூராட்சி செயல் அலுவ லர் ஆகியோடிரிடம் மனு அளித்துள்ளது. இந்தத் தகவலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.ஏ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.