இந்தியாவில் அதிக அளவு ஊழியர்களைக் கொண்ட நிறுவனமான ரயில்வேயில் லட்சத் துக்கும் மேற்பட்ட இடங்கள் பணியிடங்கள் காலி யாக உள்ளன. அதில் முதல் மட்டத்திலான (Level 1) 32 ஆயிரத்து 438 பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிவிக்கையில் இடம் பெற்றுள்ளவை அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளுக்கான பணிகளாகும். தேர்வு செய்யப்படுபவர்கள் உற்பத்திப் பிரிவு, சிக்னல், பணிமனை, டீசல் பணிமனை உள்ளிட்ட பிரிவுகளில் பணியமர்த்தப்படுவார்கள். அறிவிக்கை எண் - CEN No. 08/2024 தேதி - 22.01.2025 விண்ணப்பங்களை நிரப்புவதற்கான தொடக்கம் - 23.01.2025 விண்ணப்பங்கள் நிரப்ப கடைசித்தேதி - 22.02.2025 தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசித்தேதி - 24.02.2025 விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள - 25.02.2025 முதல் 06.02.2025 வரையில் வாய்ப்பு தரப்படும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 36 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அந்தப் பிரிவுக்கான தளர்வுகள் உண்டு. கல்வித்தகுதி குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது இவற்றிற்கு இணையான படிப்பைப் படித்திருக்க வேண்டும். அதேவேளையில், 18 வயதும் நிரம்பியிருத்தல் அவசியமாகும். தேர்வு முறை ஆன்லைனில் தேர்வு நடைபெறும். 90 நிமிடங்கள் நடை பெறும் தேர்வில் 100 வினாக்கள் எழுப்பப்படும். பொது அறி வியலில் 25 வினாக்கள், கணிதத்தில் 25, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவுத் திறன் 30, பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் 20 வினாக்கள் இருக்கும். இது உத்தேச மான எண்ணிக்கைதான். பாடவாரியான வினாக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம். பல்வேறு நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்பதால் Normalisation of Marks என்ற முறை கையாளப்படும். கடினமான வினாத்தாள்கள், எளிதான வினாத்தாள்கள் என்று தரம் பிரிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண் உண்டு. ஒவ்வொரு தவறுக்கும் தலா மூன்றில் ஒரு பங்கு (1/3) மதிப்பெண் கழிக்கப் படும். அடுத்த கட்டத் தேர்வுகள் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தடுத்து மூன்று கட்டத் தேர்வுகள் உண்டு. அவை உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவப் பரிசோதனை ஆகும். ஆன்லைன் தேர்வு உள்ளிட்ட நான்கு கட்டங்களுக்கு தேர்வு மையங்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பிரசுரிப்பதன் மூலமும் தகவல் தெரிவிக்கப் படும். ஆன்லைன் தேர்வு உள்ளிட்ட நான்கு கட்டங்கள் நடைபெறும் விபரங்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி கள் மூலம் அனுப்பப்படும். மையங்களை மாற்றிக் கொள்வ தற்கான கோரிக்கைகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது. உடற்தகுதி விபரங்கள், தேவையான சான்றிதழ்களின் பட்டியல், மருத்துவ அளவுகோல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அறிவிக்கையில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. எந்தெந்த ரயில்வே மண்டலங்களில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதும் அறிவிக்கையின் பிற்சேர்க்கையில் தரப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு,கேரளா மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல ரயில்வேயில் 2 ஆயிரத்து 694 பணியிடங்களை நிரப்புகிறார்கள்.
மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று
ஆன்லைனில் விண்ணப்பிக்கையில் Create an Account என்று ஒரு பகுதி இருக்கிறது. வேறு பணி களுக்காக 2024 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தவர்கள் இதை நிரப்பியிருப்பார்கள். அவர்கள் அதே விபரங்களைத் தான் இதிலும் குறிப்பிட வேண்டும். புதிதாக விண்ணப்பிப் பவர்கள் மிகவும் கவனமாக நிரப்ப வேண்டும். விண்ணப் பத்தில் உள்ள தவறுகளை மாற்றுவதற்கு அவகாசம் வழங்கப்படும். ஆனால் இதில் மாற்றங்களை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. மேலும் விபரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/.