tamilnadu

img

சிஇஓஏ பள்ளியின் 30ஆவது ஆண்டு விழா

மதுரை, ஜன.27 - சி.இ.ஓ.ஏ பள்ளியின் 30 ஆவது ஆண்டு விழா ஜன.25 அன்று நடைபெற்றது. விழா வின் சிறப்பு விருந்தினராக மதுரை வடமலை யான் மருத்துவமனை தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குநர் புகழகிரி வடமலையான் கலந்து கொண்டார்.  அப்போது அவர், “சி.இ.ஓ.ஏ பள்ளி மாணாக்கர்களை மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் உருவாக்குவதில் மகத்தான சாதனை படைத்து வருகிறது” என்றார்.  கடந்த ஆண்டு 12, 11 மற்றும் 10 ஆம் வகுப்பில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், நூற்றுக்கு நூறு  மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவி களுக்கும் சுமார் ரூ.10 லட்சம் வரை பண முடிப்புகளை அளித்து சிறப்பித்தார்.  பள்ளித் தலைவர் இராசா கிளைமாக்சு உரையாற்றுகையில், “மருத்துவப் படிப்புக்கு நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுப் பயிற்சி உட்பட அனைத்து உயர் படிப்பு களுக்கும், நுழைவுத் தேர்வு பயிற்சி மிக  குறைந்த கட்டணத்தில், சிறந்த ஆசிரி யர்களை கொண்டு பள்ளியிலேயே நடத்தப் பட்டு வருகிறது” என்றார்.  பின்னர் மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செயல் தலைவர்  இ.சாமி, இயக்குநர்கள் விக்டர் தனராஜ், சௌந்திரபாண்டி, அசோகராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், ஜெயசந்திரபாண்டி, பள்ளி முதுநிலை முதல்வர் கலா, பள்ளி முதல்வர்கள் மஞ்சுளா, சாந்தி, சி.இ.ஓ.ஏ. கிளைகளாகிய காரியாபட்டி, மேலூர், சாத்தூர், தேனி மற்றும் இடையமேலூர் பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.